இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உண்மை

படம்
  உரிமை இல்லாத உறவு உண்மை இல்லாத அன்பு நேர்மை இல்லாத நட்பு இவை ஒருநாள் நம்மை விட்டு விலகிவிடும்.

தம்பதியர் தினம்

படம்
  தாம்பத்ய வாழ்க்கையின் ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்த உருவாக்கப்பட்டதே உலக தம்பதியர் தினம். அது மே மாதம்  29ம் தேதியன்று  உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில நாடுகளில்  விடுமுறை வழங்குகிறார்களாம்! தம்பதிக்கு டூர் பேக்கேஜ் போட்டுக் கொடுத்து விட,  ஜாலியாக சுற்றுலா சென்ற இடத்தில் கேக் வெட்டி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்து வார்களாம்! கட்டிட அஸ்திவாரம் போல், கல்யாண பந்தமும் காலங்காலமாய் நிலைத்து நிற்பதும் அவசியம்தானே! அது ஆண்டிப்பட்டி கிராமத்துல நடக்கிற கல்யாணமோ.. இல்லை  அம்பானி வீட்டு கல்யாணமோ.... ஊரைக் கூட்டி விருந்து படைத்து, விதவிதமாய் ஆடை அணிந்து மணமக்களை ஆசி பெற வைத்து உற்சாகமாக நடத்துவதில் நமக்கு நிகராக யாருண்டு! அதே நேரம் வெளிநாடுகளில் திருமணத்தை விட பரபரப்பாக பேசப்படுவது, அவர்களின் விவாகரத்து தான். இந்த நிலை மாறி. தாம்பத்ய வாழ்க்கையின் ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்த உருவாக்கப்பட்டதே உலக தம்பதியர் தினம். பெண் பார்ப்பதில் துவங்கி, பெண்ணை கெட்டி மேளம் முழங்க, அக்னி சாட்சியாக தாலி கட்டி, வரவேற்பு, தடபுடல் விருந்து நடக்கும் நிகழ்வுகளை மணமக்கள்  வாழ்க்கை முழுக்க ஒரு

#ஊரடங்கில்மீண்டும்நாம்..

படம்
  #ஊரடங்கில்மீண்டும்நாம்.. அந்தநாள் ஞாபகம்.. ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே😔 சென்ற ஆண்டு மார்ச்சில் கொரோனா ஆரம்பித்தபோது..இதோ மூன்று மாதத்தில் போய்விடும்.ஆறு மாதத்தில் போய்விடும்...என்றெல்லாம் நினைக்க கொரோனா ஒரு அரக்க உருவமெடுத்து நம்மை இப்படி வருடக் கணக்கில் ஆட்டி வைக்கும் என்று யோசித்தோமா? என்று மறையும் இந்த கொரோனா? இதில் ஒரு சந்தோஷம் என்னவெனில், நாங்கள் ஆகஸ்ட் மாதம்தான் கும்பகோணம் அருகில் வீடு கட்டி முடித்து கிரஹப்ரவேசம் செய்தோம். அப்போது சென்னையில் இருக்கும் என் இரண்டாவது மகன் குடும்பத்துடன் வந்தான். இங்கு நெட்வொர்க் மிக நன்றாக வந்ததால் திரும்ப சென்னை போவதாக இருந்தவன் இங்கேயே தங்கி விட்டான். இரண்டு பேத்திகளுக்கும் இந்த இடம், மாசில்லாத சுற்றுப்புறம், எல்லாம் மிகப் பிடித்து விட்டதால்  நன்கு என்ஜாய் செய்கிறார்கள். பிள்ளையும் onlineல் வேலை பார்ப்பதோடு தோட்டம் போட்டு நிறைய செடிகளை வளர்த்து அழகாக பராமரிக்கிறான். காய்கறிகளை நம் தோட்டத்திலிருந்தே பறித்து சமைப்பதில் ஒரு மகிழ்ச்சிதானே? வீட்டைப் பார்க்கும் ஆசையில் கிரகப்ரவேசத்திற்கு வர முடியாத என் பெண் பேரன், பேத்தியுடன்  செப்டம்பரில் வந்து இருந

பயணம்(100வரி)

படம்
  பெரிய பெரிய காடு தாண்டி மலை தாண்டி ஒரு இடம் அழைத்துப் போகிறேன். வரியா அம்மா? என்றான் சிங்கப்பூரிலிருந்த என் கடைக்குட்டி பிள்ளை! எந்த இடம் என்று கூட கேட்காமல் கிளம்பினேன். எந்த இடத்தையும் சுற்றிப் பார்ப்பதில் எனக்கு அலாதி ஆசை! அது கம்போடியா நாட்டிலுள்ள ஆயிரம் லிங்க நதி. உலகிலேயே மிகப் பெரிய இந்து  ஆலயமான அங்கோர்வாட் ஆலயம்  'காம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ளது. உலகின் 'எட்டாவது அதிசயம்' எனப் புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் உயர்ந்து, நிமிர்ந்து, வானளாவ நின்று நம் இந்தியக் கலாசாரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. யுனெஸ்கோவினால் உலகப் பண்பாட்டுச் சின்னமாக   திகழ்கிறது. முற்காலத்தில் வியாபாரம் மற்றும் பொருளாதார உயர்வுக்காக காம்போஜ நாட்டுக்குச் சென்ற இந்தியர்கள், தங்கள் கலாசாரம், பண்பாடு, தெய்வ வழிபாடு இவற்றை அங்கு பரப்பினர். அப்போது காம்போஜத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மன்னர்களான இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி. 802) முதல் கடைசி அரசரான ஏழாம் ஜெயவர்மன் (கி.பி.1400) வரை ஆண்ட காலகட்டத்தில்தான் கம்போடியாவில் புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு லட்

இதுவும் பெண்ணா..(100வரி)

கனகாவுக்கு இது மூன்றாவது பிரசவம். முதல் மூன்று பெண்களோடு இதுவும் பெண்ணாக இருக்கக் கூடாதே என்ற பயம். வலியில் கதறினாள். ..சும்மா கத்தாத. நல்லா முக்கிவிடு.. என்று நர்ஸ் சத்தம் போட, ஒரு நிமிடம் மூச்சை இழுத்து முக்கிவிட குழந்தை வெளியில் வந்து அழுத சத்தம் கேட்டது. ..என்ன குழந்தை?..என்று ஆவலாகக் கேட்டவள்,பெண் என்றதும் கலங்கினாள். வீட்டிற்குப் போனதும் கணவனும் மாமியாரும் மாறிமாறி வசை பாடினார்கள். பெண்ணுக்கு வேம்பு எனப் பெயர் வைத்தாள். அவ்வூரிலிருந்த ஒரு அநாதை ஆசிரமத்தில் யாராவது கேட்டால் தன் குழந்தையை தத்து கொடுப்பதாகக் கூறினாள். ஆசிரமத்தினர் ஒரு பிரான்ஸ் நாட்டு தம்பதியருக்கு குழந்தை வேண்டும் என்றபோது தயங்காமல் குழந்தையை  முத்தமிட்டு..அங்கு சென்றாவது சுகமாக இரு..என்று சொல்லிக் கொடுத்தாள். அவர்கள் கொடுத்த பணத்தை மாமியார் வாங்கிக்கொண்டாள். வேம்பு  ஜுலியட்டானாள். நல்ல கறுப்பானாலும் அற்புத அழகு. உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டவள் முதலிடம் பெற்று கிரீடம் சூடிக் கொண்டாள்.

அம்மாவின் கைமணம்(100 வரி)

படம்
லக்ஷ்மியின் மாமனார் மாமியாருக்கு சதாபிஷேகம். வீடு முழுதும் உறவுகள்!லக்ஷ்மிக்கு இரண்டு பிள்ளை, ஒரு பெண். மூவரும் வெளிநாட்டுவாசம். ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் கடைசி பிள்ளை தருணுக்கு  திருமணமாகவில்லை. அவன் அம்மாபிள்ளை.  சதாபிஷேகத்திற்கு உறவினர்கள் பலர் வந்திருந்ததால் வீட்டோடு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்திருந்தாள். இன்றுதான் எல்லோரும் கிளம்பிச் சென்றபின் 'அப்பாடா' என்று சற்று கால் நீட்டி அமர்ந்தாள் லக்ஷ்மி. கடைக்குட்டி பிள்ளை வந்து அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான்.  'என்னடா வேண்டும்? நாலஞ்சு நாளா நல்ல சாப்பாடு சாப்பிட்டயா? அங்கதான் நீயே ஏதோ பண்ணி சாப்பிடறயே. ' 'அட போம்மா. நான் அதுக்காகவா வந்தேன். உன் கையால ஒரு  பூண்டுரசம்  சாதம் சாப்பிடணும்.அந்த ருசி எதில?' 'அட அசடே..அதான் டல்லா இருக்கியா? இதோ சாயந்திரமே பண்ணிப் போடறேண்டா'. 'அம்மா..கூடவே அந்த கத்தரிக்காய் ரசவாங்கியும் பண்ணிடு.'இது பெண் பூரணியின் ஆர்டர். அது என்னவோ அம்மாவின் கைமணத்துக்கு இணையேது?

குற்றம் (100வரி)

படம்
சீதை செய்தாலும் குற்றமே! ராமாயணம் நமக்கு தெரியும். சீதையின் கதாபாத்திரம் மிக அருமையானது. எந்த கஷ்டத்திலும் ராமனைப் பிரிய மாட்டேன் என்று காட்டுக்குப் போனவள் ஒரு மானுக்கு ஆசைப்பட்டு கேட்க, ராமனும் அதைப் பிடிக்கச் சென்றார். அச்சமயம் மானாக வந்த மாரீசன் மேல் ராமரின் அம்பு பட்டு அவன் ராமரைப் போல் கத்தினான். அது கேட்ட சீதை லக்ஷ்மணரிடம் ராமனைக் காப்பாற்ற போகச் சொன்னாள். லக்ஷ்மணர் ராமருக்கு எதுவும் ஆகாது என்று எடுத்துச் சொல்லியும் கேட்காமல் ..என்னை மணந்து கொள்ள நினைக்கிறாயா?..என்று குற்றம் சொல்ல..தாயே நான் உங்கள் மகன் போன்றவன்..என சொல்லிச் செல்கிறான்.  ராம ராவண யுத்தம் முடிந்தபின் ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னார். அவளுக்கு ஏன் இந்தக் கடுமையான தண்டனை என்றபோது ராமர்..நல்ல மனமுள்ள லக்ஷ்மணனை அவள் தவறாகப் பேசியதாலேயே, அவளுக்கு இந்த தண்டனை..என்று கூறியதாக இதிகாசம் சொல்கிறது. நெற்றிக்  கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே! _______ பணமிருப்பவனும் குற்றம் செய்கிறான் பதவி இருப்பவனும் குற்றம் செய்கிறான் தண்டனை அளிப்பதிலும் பாரபட்சம் அதுவும் ஒருவித குற்றம்தானே.

உண்மை..துணிச்சல்(100வரி)

படம்
  "ஏங்க குழந்தைகளோட எங்கேயாவது  போய்ட்டு வரலாமா" மாலதி கேட்டாள். "குழந்தைகளையே கேட்கலாம்" என்றான் IT கம்பெனியில் வேலை செய்யும் மாதவன். "ரமண், சுமன் இங்க வாங்க.  நாம ஜாலியா வெளிய எங்க போலாம்?" "ஹைய்யா..பீச்சுக்கு போலாம்பா" குழந்தைகள் சற்று நேரம் தண்ணீரில் விளையாடிவிட்டு மணலில் வீடு கட்டி அதில் அறைகளைத் தடுத்து உள்ளே நாற்காலி டி.வி. எல்லாம் செய்தார்கள். மாலதியும்  மாதவனும் தாங்கள் வாங்கப் போகும் வீடு பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். "யார் வீடு அழகா இருக்குனு  அப்பா அம்மாவைக் கேக்கலாமா?"என்று  பெற்றோரை அழைத்தனர். மாதவன் ஐந்து வயது சுமனிடம் "ரமண் வீட்டில் இரண்டு பெட்ரூம் இருக்கு. உன் வீட்டில்  ஒரு ரூம்தானே இருக்கு" "நான் பெரியவனானதும் நீங்களும், அம்மாவும் நம்ம தாத்தா,பாட்டி இருக்கற ஹோமுக்கு போயிடுவீங்களே. அதனாலதான்"என்றதைக் கேட்டதும் இருவரும் சம்மட்டியால் அடிபட்டதுபோல் உணர்ந்தார்கள். உண்மையைச் சொல்லும் துணிச்சல் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.

பால் பொங்கி வழிந்தது(100 வரி)

படம்
  குழந்தை.. நேற்று அடுத்த வீட்டுப் பெண் அவளிடம்..இப்பொழுதெல்லாம் திருமணமாகியவுடன் குழந்தை பிறக்காவிட்டால் பிறகு கஷ்டம்தான். நீங்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்கிறீர்களா?..என்றபோது, பதில் சொல்லாமல் உள்ளே வந்து விட்டாள் அம்பிகா! பால் பொங்கி வழிந்தது கூட தெரியாமல் அதே யோசனையில் இருந்தாள் அம்பிகா. அந்த நேரம் உள்ளே வந்த மனோகர்..ஹேய் அம்பிகா என்ன ஆச்சு? பால் பொங்குவது கூட தெரியலயா?.. என்றபடி கேஸை அணைத்தான்.  கண்களில் தளும்பிய கண்ணீரை துடைத்துக் கொண்டவள்..ஏங்க நமக்கு குழந்தையே பிறக்காதா?..என்றாள் குரல் தழுதழுக்க.  ..யார் சொன்னது இப்படியெல்லாம்? அசட்டுத் தனமாக பேசாதே. டாக்டரிடம் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்கிறோம். கண்டிப்பா பிறக்கும். அதுவரை எனக்கு நீ குழந்தை. உனக்கு நான் குழந்தை..அழாமல் ஒரு கப்  காஃபி போடு.. என்றபடி அவளை ஆதரவாக அணைத்தபடி காஃபி சாப்பிடச் சென்றான் மனோகர்!

அழகிய பெண்ணொருத்தி(100வரிக்கதை)!

படம்
குமரன், சுதாகர், மணி மூவரும் கல்லூரியில்  படிக்கும் நண்பர்கள்.  உயரமான அழகிய உடற்கட்டுடன் Bob cut ஹெர்ஸ்டைலும், அதில் ஒரு சிவப்பு ரோஜா, தோளில்  கைப்பையுடன் அழகிய பெண்ணொருத்தி சென்றாள்! "அங்க போறது நம்ம காலேஜுக்கு புதுசா வந்திருக்கற லெக்சரரோ?" மணிகூவினான். குமரன் பெண்களைக் கண்டால் ஜொள்ளுவிடும் ரகம்!  அதே நேரம் அந்தப் பெண்ணின் கர்சீஃப் கீழேவிழ,  "நான் அதை அவளிடம் கொடுத்து விட்டு யாரென்று விசாரிக்கிறேன்" என்று வேகமாகச்சென்று கர்சீஃப்பை எடுத்து  அதற்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவளைத் தொடர்ந்தான்.  சுதாகரும் மணியும் கட்டைவிரலை உயர்த்தினர்! அவளுக்கருகில் சென்ற குமரன்,"Excuseme. இந்தாங்க  உங்க கர்சீஃப்" என்றபடி நீட்ட, திரும்பியவளைப் பார்த்தவன் அதிர்ந்தான். "டேய்..நீ ரகுதான.ஏண்டா இப்படி?" என்றதும், மூவருமாகச் சேர்ந்து ஏப்ரல்ஃபூல் என்று கத்தினர்!  "யார் புடவை கட்டிக்கிட்டு போனாலும் ஜொள் விட்றியே? அதான் உன்னை ஏப்ரல்ஃபூலாக்க நாங்க இப்படி ஒரு ஐடியா செய்தோம்!  இனியாவது பெண்களிடம் மரியாதையா நடந்துகொள்."

வைராக்கியம்(100வரிக்கதை)

படம்
  வைராக்கியம் "அம்மா தாத்தாவும் பாட்டியும் ஏன் பேசிக்கறது இல்ல?"வானதி சங்கரியிடம் கேட்டாள். "என்ன கேட்ட? அதுவா.. அது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையாச்சே.. கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு. எனக்கு அப்போ பதினெட்டு வயசு இருக்கும்." "அவங்களுக்குள்ள அப்படி என்ன சண்டை? நீங்களும் மாமாவும்  தடுக்கலயா?" "சொல்றேன் வானதி. உன் பாட்டிக்கு ஒரு தம்பி..அதான் என் மாமா. சுப்புனு பேரு. உங்க தாத்தா அப்ப  நிறைய சம்பளத்தில நல்ல வேலைல இருந்தார். என் மாமாவுக்கு படிப்பு ஏறல. அதோடு கெட்ட சகவாசம் நிறைய. சரியா படிக்காம வேலையும் இல்லாம இருந்தான்." "அவருக்கு தாத்தா உதவிருக்கலாமே?" "அதுல வந்தது தான் வினை. மாமா என் தாத்தா பாட்டிகிட்ட அடங்க மாட்டார். அவங்களை எதிர்த்து பேசுவார்." "ஐயோ பாவம்." "அவங்க,  தாத்தாகிட்ட சுப்பு மாமாவுக்கு ஏதாவது உதவி செய்யச் சொன்னாங்க. உங்க தாத்தா  அவரை கூப்பிட்டு நிறைய அறிவுரை சொன்னார்." "ரொம்ப சுவாரசியமா சினிமா கதை மாதிரி சொல்றியே!" "எங்க அப்பாவும் மச்சினனுக்கு ஏதாவது உதவி செய்ய ந

அகல்யாவின் ஆசை..(100 வரிக்கதை)

படம்
அகல்யாவின் ஆசை.... "எங்கப்பாவை ஏன் கூப்பிடக் கூடாதுனு சொல்லுங்க.." என்று ஸவிதா கேட்டபோது அவள் பாட்டி ஜானகி பதில் சொன்னாள். "இங்க பாரு ஸவிதா. உங்கப்பா உனக்காக இதுவரைக்கும் என்ன செய்திருக்கார்? அவர் வரதில எங்களுக்கு இஷ்டமில்ல." "அதெப்படி சொல்றீங்க. எங்கப்பாவோட எனக்கு இன்று வரைக்கும் தொடர்பு இருக்கு. என்னிடம் அவர் பாசமாதான் இருக்கார். அவர் வந்தாதான் நான் கல்யாணம் செஞ்சுப்பேன்." சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டாள் ஸவிதா. சுந்தரம் ஜானகிக்கு மலர்விழி ஒரேமகள். மிக செல்லமாக வளர்ந்தவள். இருபத்திநான்கு வருடங்களுக்கு முன்பு  மலர்விழிக்கும் மாதவனுக்கும் மிக அருமையாக திருமணம் நடைபெற்றது. மாதவன் அரசாங்க வேலையில் இருந்தான்.  மாதவனின் பெற்றோர் கேட்ட சீர்களுடன் அதிகமாகவே செய்து சிறப்பாக திருமணம் நடத்தி வைத்தார் சுந்தரம். திருமணமான அடுத்த மாதமே கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தாள் மலர்விழி.  மாமியார் தன்னை மிகவும் மோசமாக நடத்துவதாகவும் அத்தனை வேலைகளையும் தானே செய்ய வேண்டியிருப்பதால் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் சொல்லி அழுதாள். அவளை சமாதானம் செய்து கொண்டுவிட்டனர். மலர்விழி

மனம்

படம்
மனம் ஒரு குரங்கு. ஒரு நொடி இங்கிருக்கும்.. மறுநொடி அடுத்த ஊருக்குச் செல்லும்!  தெய்வபக்தியில் திளைக்கும்.. அடுத்த நொடி காமத்தை நாடும்! மனம் ஒரு கோவில். அதில் நல்ல எண்ணங்களும் உண்டு..  தீய எண்ணங்களும் உண்டு! ***** மனிதன் பிறந்தபோதே  அவன் மனமும் வளர்ந்தது..! குழந்தையாய் இருந்தபோது குழந்தை மனம் இருந்தது!குழந்தை வளரும்போது குழப்பமும் வளர்ந்தது! உருவமும்  இன்றி இருக்கும் இடமும் தெரியாமல் மனிதனை ஆட்டிப் படைக்கும் மனம்! மனம் ஒரு நிமிடம் பூஞ்சோலையாகிறது..அடுத்த கணம் போர்க்களமாகிறது! நம்  மனம் ரகசியங்கள் நிறைந்த குகை! அது எப்பொழுது மூடும் என்று திறக்கும் என்பதை யாருமறியார்!

காணொளிகள்.

படம்
 

கடமை

படம்
நம் மனதில் கனவுகள் ஆயிரம்! அவை தானே நனவுகள் ஆகாது! அதற்குத் தேவை கடும் உழைப்பும் கடமை உணர்வும்! ****** அன்பு செய்வதில் காற்றாய் இருப்போம்! பாசம் காட்டுவதில்  மாரியாய் இருப்போம்! கருணை பொழிவதில் கடலாய் இருப்போம்!! உதவி செய்வதில் உயர்ந்த மலையாய் இருப்போம்! அடுத்தவர் வாழ்வில் ஒளியாய் இருப்போம்! அயராத உழைப்பில்  விழிப்பாக இருப்போம்! எவர் நம்மைத் தடுப்பினும்  கடமை தவறாதிருப்போம்!

பௌர்ணமி

படம்
இரவு என்றொரு அந்தப்புரம்.. அதில் வட்ட வடிவ வெளிச்சப் பூவே! மறையும் நேரம் ஆதவன் ஏற்றிய தீபமோ! ஓவியன் வரைந்த வட்டமுக தேவதையோ! பௌர்ணமியில் பளிச்சாக இருக்கும் நீ அமாவாசையன்று எங்கு மறைந்து ஒளிந்தாய்! நீலவான மேடையில் நட்சத்திரங்கள் சூழ இரவெனும் இனிய கவிதையை எழுத வந்த முழுநிலவே! வாராய்..வந்தெமை மகிழ்விப்பாய் அழகிய திங்களே!

அழைப்பிதழ்..(100 வரிக்கதை)

படம்
  மரகதம் காலை சாப்பாடு முடித்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள். ரமணியும், சுஜாவும் அவர்கள் பெண்ணின் திருமண அழைப்பிதழுடன் வந்தார்கள். அடுத்த வாரம் திருமணம் என்றும், அவசியம் குடும்பத்துடன் வரும்படியும் சொல்லிச் சென்றனர். குளிர்பானம் குடித்துவிட்டுக் கிளம்பினர். பத்திரிகையில் முதற்பக்கம் பெண் பிள்ளையின் புகைப்படம் இருந்தது. அந்தப்பையனின் பெயர் ரமேஷ் என்றிருக்க அவனை எங்கோ பார்த்த நினைவு வந்தது. தான் சிங்கப்பூருக்கு மகள்வீடு சென்றபோது  ஒரு விழாவில் அவனை அவன்மனைவி குழந்தையுடன் பார்த்த நினைவு வர, உடன் சுஜாவுக்கு  ஃபோன் செய்தாள். பிள்ளையைப் பற்றிய விபரங்கள் கேட்டாள்.  தமக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்றும்  வெளிநாட்டில் பணி புரிவதாகவும் சொன்னாள்...ஏன் கேட்கிறீர்கள்?..என்றபோது மரகதம் அவனைப்பற்றிய விபரம் சொல்ல, அதிர்ச்சியானாள் சுஜா. கணவரிடம் சொல்லி அவர்களிடம் விசாரிக்க, அங்கு அவன்ஒரு சீனப்பெண்ணைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்தால் மாறிவிடுவான் என்றும் அவர்கள்கூற, அன்றே திருமணத்தை நிறுத்தி விட்டனர். பத்திரிகைகளில் புகைப்படம் போடுவதால் இதுபோன்ற நன்மைகளும் உண்டு போலும்!

நினைவலைகள்..13

படம்
எனக்கொரு மகன் பிறந்தான்! என் முதல் மகனைக் கருவுற்றபோது நான் இருந்தது உத்தர பிரதேசத்திலுள்ள மதுராவில். என் தந்தை பணி புரிந்தது நாகர்கோவிலில்! காஷ்மீர் - கன்யாகுமரி எட்டாம் மாதம் பிரயாணம் செய்வது கடினம் என்பதால்  ஆறாம் மாதமே வளைகாப்பு சீமந்தம் முடித்து  நான் அம்மா வீடு வந்தாச்சு! ஒன்றரை வருடம் கழித்து அம்மா வீடு வந்ததால் ஒரே குஷி! மகன் பிறந்தது மார்கழி கடைசியில் ஜனவரி 4ம் தேதி. அதுவரை நான் வாசலில்  தினமும் பெரிய கோலம் போடுவேன். அன்று மதியம் முதலே ஒரு மாதிரி சோர்வாக இருந்தாலும் சொல்லத் தெரிவில்லை. வலியும் அதிகமில்லையா அல்லது எனக்கு எப்படி வலிக்கும் என்று தெரியவில் லையோ? அன்று இரவு 9 மணிக்கு எல்லோரும் படுத்து விட்டோம். திடீரென்று வயிற்றில் 'பட்' என்று ஏதோ சத்தம் கேட்க, தண்ணீர் வெளிவருவது போல் தோன்ற, அம்மாவைக் கூப்பிட்டேன். எனக்கு ஏதோ தவறாகி விட்டது என்ற பயம் வந்து விட்டது. என் அம்மாவும் பயந்து விட்டார். உதவிக்கு இருந்த மாமி..பனிக்குடம் உடைந்து விட்டது. குழந்தை பிறந்துவிடும். ஆட்டோ கூப்பிட்டு வாங்கோ...என்றார் அப்பாவிடம். என்னை 'காலை அகட்டாமல் இணைத்து வைத்துக் கொள். குழந்தை கீழே

நினைவலைகள்..14

படம்
பிறந்த நாள்..இன்று பிறந்தநாள்..! நான் சிறுமியாக இருந்த நாட்களில் எல்லாம் பிறந்த நாள் கேக், பார்ட்டி, வெளியில் சாப்பாடு இதெல்லாம் கிடையாது. புதிய ஆடை வாங்கித் தருவார்கள். அம்மா வீட்டில் பாயசம் செய்வார். கோயிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்து அர்ச்சனை செய்து வருவோம். என்  வகுப்பில் படிக்கும் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு சாக்லேட் கொடுப்பேன். என் பிறந்த நாள் மே மாதம் வரும் என்பதால் வகுப்பு விநியோகம் கிடையாது! திருமணத்துக்கு பின்னும் ஏதாவது ஸ்வீட் செய்து புதிய புடவை வாங்கிக் கொள்வேன். கடந்த 2017ல் எனக்கு அறுபது வயது முடிந்தபோது சஷ்டியப்த பூர்த்தி செய்து வைத்தனர் என் கணவரும் குழந்தைகளும். என் இரண்டு  பிள்ளைகள், பெண் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். என் நட்சத்திர நாளன்று ஹோமம், ஜபத்துடன் விமரிசையாக சஷ்டி அப்த பூர்த்தி நடை பெற்றது. அடுத்த இரண்டு நாளில் என் பிறந்த தேதி வந்தது. அன்றுதான் என் கடைசி மகனுக்கும் பிறந்தநாள். என் மகள் ஏற்பாட்டில் எல்லோரும் ஹோட்டல் சென்று கேக் வெட்டி கொண்டாடினோம்! என்னால் மறக்க முடியாத பிறந்தநாள் ஜெர்மனியில் நான் கொண்டாடிய என்பதை விட, என் பிள்ளை, ம

கட்டாயம் கடைப்பிடிப்போம்

படம்
இன்றைய நிலையில் நாம் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டியவை.. முகக் கவசம் அணிவது.. கைகளை அடிக்கடி சோப் போட்டு சுத்தம் செய்வது.. இரண்டு கிலோமீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிப்பது.. தொட்டுப் பேசுவதையும் கட்டிப் பிடிப்பதையும் தவிர்ப்பது.. இவற்றைக் கட்டாயம் கடைப் பிடித்தால் கொரோனா நம்மை நெருங்காது.

நினைவலைகள்..13

படம்
நாளாம் நாளாம் திருமண நாளாம்! ஏப்ரல் ஐந்தாம் நாள் என் வாழ்வில் மிக முக்கியமான நாள்...என் திருமண நாள்!1976 ம் ஆண்டு என் 18ம் வயதில் இந்த நாளில்தான் நான் திருமதி யாக மாறினேன். என் அம்மாவும்,  அப்பாவும் என்னைப் பிரிய மனமின்றி  திருமணம் செய்து கொடுத்து விட்டு கலங்கிய கண்களுடன் நின்றது இன்னும் என் கண்களில் கண்ணீரை நிறைக்கிறது. திருமணத்தன்று என் கணவருடன் அதிகம் பேச முடியவில்லை. காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருந்ததால் சோர்வு வேறு. தம்பியிடம் என்ன பேசி மயக்கி  விடுவேனோ என்ற பயத்தினால் என் நாத்தனார் என் பக்கத்திலேயே இருந்தார்! எங்கள் திருமணம் முசிறியில் நடந்தது. என் கணவர் பணி புரிந்தது திருச்சியில். இரண்டுக்கும் இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரமே! என் பெற்றோருக்கு மிக்க சந்தோஷம், பெண்ணை அடிக்கடி பார்க்கலாமே என்று! பாவம் என் அம்மாவின் சந்தோஷம் நிலைக்க வில்லை. அடுத்த எட்டே மாதத்தில் என் கணவருக்கு மதுராவுக்கு மாற்றலாக அங்கு சென்று விட்டோம். திருமணத்திற்கு மறுநாள் காரில் முசிறியிலிருந்து திருச்சி கிளம்பினோம். காரில் என் பெற்றோர், நாத்தனார் எங்களுடன் வந்தனர். மற்ற உறவினர்கள் பஸ்ஸில் திருச

பூவுக்குள் பூகம்பம்..(100 வார்த்தை கதை)

படம்
சாது மிரண்டால்... ரத்னா மிகவும் அமைதியான பெண். எவரையும் கடுமையாகப் பேசமாட்டாள். பள்ளி, கல்லூரியிலும் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருப்பவள். படிப்பு முடித்து வேலைக்குச் சென்றவள் அங்கும் பெண்களிடம் மட்டுமே  பேசிப்பழகுவாள். ஆண்களிடம் அநாவசியமாகப் பேசமாட்டாள். அங்கு வேலை செய்யும் ரஞ்சன் மும்பையைச் சேர்ந்தவன். அவன் குடும்பம் இரண்டு தலைமுறையாக இங்கு வசிப்பதால் தமிழ் நன்றாகப் பேசுவான். பெண்களிடம் அநாவசியமாக  பேசுபவன், அவர்களைக் கண்டபடி தொட்டுப் பேசுவான். ரத்னா அதுபற்றி அவர்களிடம் கேட்க,'அவன் மிக நல்லவன். ஃப்ரீயாகப் பழகுவான்' என்றார்கள்.ஒருநாள் மற்ற பெண்களைத் தொடுவதுபோல் ரத்னாவையும் தொட்டுப்பேச, வந்தது கோபம் ரத்னாவுக்கு.  "என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பெண்களை என்னசெய்தாலும் பயந்து வாய்மூடி இருப்பார்கள் என்று நினைத்தீர்களா? ஈவ்டீஸிங் என்று போலீஸில் புகார் செய்வேன்" என்றபடி சத்தம்போட அனைவரும் அங்கு குழுமி விட்டனர்.ரஞ்சன் அவமானத்தில் தலை குனிந்தான்.சாதுவாக இருக்கும் அவள் பூவுக்குள் பூகம்பமாகக் கோபம் கொண்டதைப் பார்த்து அனைவ ருக்கும் அவள்மேல் மரியாதை ஏற்பட்டது.

விருப்பம்

படம்
நாம் எதையும் அடைய விரும்புவதில் தவறில்லை.. அதற்காக நாம் முனைப்போடு செயல்பட்டால் மட்டுமே எந்த விருப்பமும் தடையின்றி நிறைவேறும்!

கனிவு

படம்
  தவறு செய்துவிட்டு அம்மா முன் பயந்து நிற்கும் போது 'இனி இப்படி செய்யாதே' என்று அம்மா சொல்லும் கனிவான வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் அடையும் மகிழ்ச்சி சொல்ல முடியாதது! ***** கனிவான பார்வை..  இனிமையான பேச்சு.. அச்சம் இல்லாத வாழ்வு.. கருத்தான எழுத்து.. பிணி இல்லாத தேகம்.. நிறைவான மனம்.. அமைதியான உலகம்.. இத்தனையும் வேண்டுகிறேன் இறைவா உன்னிடம்!

அறிவு

படம்
  அறிவு பணத்தில் மூழ்கி மனம் மோகத்தில் மூழ்கி எண்ணம் ஆடம்பரத்தில் முழ்கி மக்கள் கடனில் மூழ்கி வாழ்க்கை சோகத்தில் மூழ்கி  சமுதாயமும் அறியாமையில் மூழ்கத் தொடங்கிவிட்டது.... ***** அறிவு, நம்மை இயக்கும் ஒரு சிறந்த கருவி.  அறிவு ஒரு  துன்பத்திலிருந்து  நம்மைப் பாதுகாக்கும் கருவி.  நாம் செவி வழிக்கேட்கும் செய்திகளில் உள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள செய்வதே அறிவு.

நினைவலைகள்..11

படம்
முதன்முதல் சைக்கிள் ஓட்டிய அனுபவம்.. விழுந்து விழுந்து எழுந்தேன்! நான் சின்னப் பெண்ணாய் இருந்த நாட்களில் எங்கள் வீட்டில் சைக்கிள் கிடையாது. என் தம்பிக்கு பத்து வயதான பின் தான் சைக்கிள் வாங்கினார் என் அப்பா. அப்பவும் அவர் மட்டுமே ஓட்டுவார். நாங்கள் அந்த சமயம் சென்னையில் இருந்தோம். என் தம்பிக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க அருகில் இருந்த மைதானத்திற்கு அழைத்து செல்லும் போது  நானும் செல்வேன். என் அம்மாவுக்கு பெண்ணும் சைக்கிள் கற்று ஓட்ட வேண்டும் என்ற ஆசையால் என்னையும் அனுப்பி கற்றுக் கொள்ள சொல்வார். நானும் கற்றுக் கொண்டேன். ஆனாலும் என்னை என் வீட்டில் தனியே சைக்கிள் ஓட்ட அனுப்பிய தில்லை! அதன் பின் படிப்பு முடிந்து திருமணம். என் கணவர் வேலை நிமித்தம் உத்தர பிரதேசத்திற்கு மாற்றல்! சைக்கிள் ஓட்டும் ஆசை காணாமலே போயிற்று! என் கணவர் ஸ்கூட்டர் வாங்கி விட்டதால் ஜாலியாக அவரை அணைத்தபடி பின்னால் அமர்ந்து பயணம்! குழந்தைகள் பிறந்து அவர்களும் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டார்கள். அச் சமயம் எல்லா பெண்களும் TVS 50 ஓட்டியதைப் பார்த்து எனக்கும் ஆசை வந்தது. என் குழந்தைகளுக்கும் பனிரெண்டு வயதானதால் என் கணவர் பின

அன்புள்ள அம்மா(25.2.'21)

படம்
அநேக நமஸ்காரம். நலம்.நலமறிய அவா. இங்கு நான், உன் மாப்பிள்ளை, பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திகள் எல்லாரும் நலம்.நீ எப்படி இருக்கிறாய்? ஏன்மா..அப்பாவை விட்டு எந்த இடமும் போகாத நீ சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாயே? பாவம்..அப்பா நீயில்லாமல் எட்டு வருடம் ரொம்பவே கஷ்டப்பட்டார். அப்பா வந்ததும் இப்போ சந்தோஷமாக இருப்பாயே! நான் கடந்த 14 வருடமாக உன்னிடம் நேரில் பேச முடியாத விஷயங்களை இந்த கடிதத்தில் எழுதி அனுப்புகிறேன். நான் குழந்தையாய் இருந்தபோது சாப்பிட ரொம்ப படுத்துவேன் என்பாயே? உன் வேலையெல்லாம் விட்டு எனக்கு சாதம் ஊட்டுவதற்குள் எவ்வளவு கஷ்டப்பட்டாயோ? இரவில் உன் புடவையைப் பிடித்துக் கொண்டு தூங்கும்போது தூக்கம் வராமல் அந்தப் புடவையை வாயில் கடித்து கிழித்து விடுவேன் என்று சொல்லியிருக்கிறாய். உனக்கு ரொம்பப் பிடித்து வாங்கிக் கொண்ட பட்டுப் புடவையை நான் கிழித்தபோது ரொம்ப வருத்தப் பட்டாய் என்று சித்தி சொன்னார். நான் எவ்வளவு கஷ்டப் படுத்திருக்கேன் உன்னை. நிற்க..எனக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் காரணத்தோடு சொல்லிக் கொடுத்த நீ இப்படி கடிதம் எழுதும்போது 'நிற்க' என்று போடுவது ஏன் என்
படம்
  3.திரும்பிப் பார்க்கிறேன்.. நான் ஒரு எழுத்தாளர். பயணக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள் என்று நிறைய தமிழ் வாரமாத  இதழ்களில் எழுதியுள்ளேன். முகநூல் தளங்களிலும் எழுதுவதுண்டு. என்தோழி ராதாநரசிம்மன் மாம்ஸ்ப்ரஸ்ஸோவில் எழுதுவதை அவரது முகநூல் பக்கத்தில் பகிர அதைப் பார்த்துதான் நான் மாம்ஸ்பிரஸ்ஸோவில் இணைந்தேன். இது பெண்களுக்கு மட்டுமான தளம் என்பதால் எந்தவிஷயத் தையும் இலகுவாக மனம்விட்டு எழுதமுடிகிறது. மற்ற தளங்களில் இப்படி முடியாது. இதில் தரும் தலைப்புகள் நம் இளமைக்கால நிகழ்வுகளைப் பற்றி இருப்பதால் மறந்த நாட்களை நினைவுபடுத்தி புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. தினம்ஒரு சிந்தனை, 100 வார்த்தைகதை, எங்கள்கருத்து, உங்கள்எழுத்து உங்கள்கருத்து உங்கள்எழுத்து இவற்றோடு நம்மனதில் தோன்றுவதையும் வலைப்பதிவுகளாக எழுதுவது மனதுக்கு உற்சாகமளிக்கிறது. எதுவுமே எழுதத் தெரியாதவர்கூட இதில் இணைந்தால் அருமையாக எழுதும் திறமை ஏற்படும். இந்த கரோனா நேரத்தில் பெண்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 
படம்
  2. இளமை திரும்புதே..! ...என்னாச்சு உனக்கு? ஏதோ யோசிக்கற. எழுதற. ஏதாவது புதுதளத்தில் சேர்ந்திருக்கயோ?... ...அட  கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டேள்!... ...அதில் என்ன ஸ்பெஷலா எழுதின?... ...எழுத விஷயமா இல்ல. முதல்ல உங்களைப் பத்திதான் எழுதினேன்... ...என்னைத்தவிர வேற நினைவே வராதா உனக்கு?... ...முதல்ல உங்களைப் பற்றி. அப்புறம் நம்ம குழந்தைகள் பேரன் பேத்தி பற்றி... ...ஆடல்பாடல் சமையல் எல்லாம் உண்டா?... ...ஆமாம். நம்ம பேத்திகள் டான்ஸ் மாட்டுப்பெண் பாட்டு சமையல் எல்லாம் போட்றேன். அதிலயும் நிறையபேர் திறமைகள் வாழ்க்கைஅனுபவங்கள் படிக்கும்போது சுவாரசியமா  இருக்கற்தோட, பல விஷயம் தெரிஞ்சுக்க முடியற்து. இதுவரை இதில பணம்கூட சம்பாதிச்சிருக்கேன் தெரியுமா?... ...ஹ்ம்ம். வரவர என்னோட பேசக்கூட உனக்கு நேரமில்ல... ...அச்சோ. கோபமா? எழுதற நேரம் தவிர உங்களோடதான பேசறேன்.. ...இளமை திரும்பின மாதிரி ஜாலியா இருக்க! உனக்கொரு பொழுதுபோக்கு. என்ஜாய்!.. ..நான் இளமையானா உங்களுக்கு சந்தோஷம்தான!என்ஜாய் பண்ண என்ஜா( சா)மி பர்மிஷன் கொடுத்துட்டேள். தேங்க்ஸ்!..

1.ரகசிய தோழி

படம்
  1.ரகசிய தோழி எஈன் ஆருயிர்த் தோழியே! என் அன்பான சிநேகிதியே! ஒரு தோழியின் நட்பு ஒரு தாயின் அன்பைத் தரும்! முதல் காதலோ... முதல் வேலையோ... முதல் ஏமாற்றமோ... முதல் தோல்வியோ... நாம் பகிர நினைப்பது தோழியிடமே... உறங்கிய மனதை மறந்த நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்தாய்! என் உள்ளத்தில் எழுந்த உன்னத உணர்வுகளையும்.. என் வாழ்வின் இனிய நிகழ்ச்சிகளையும்.. நான் கண்ணீர் விட்டழுத நேரங்களையும்.. பிறரால் பாராட்டப்பட்ட தருணங்களையும்.. வெளிக்காட்ட முடியாத உணர்ச்சிகளையும்.. எவரிடமும் சொல்ல முடியாது என்று நினைத்து மறக்க முயன்ற நினைவுகளையும் தினமும் பகிரக் கிடைத்த தாய்மடி நீதான்.. நான் பார்த்ததும் ரசித்ததும் உன்னிடம் சொல்லி அதனால் பெற்றேன் உன்னதமான தோழிகளை! என் ஒப்பற்ற உறவும் நீ.. என் உள்ளார்ந்த அன்பும் நீ. நாம்பேச வார்த்தைகள் வேண்டாம்..எண்ணங்களை வடிக்கும் எழுத்துகள் போதுமடி! என் மனம் கவர் மாம்ஸ்ப்ரஸ்ஸோவே! ஆனந்தமும் ஆதரவும் ஆறுதலும் தரும் என் ரகசிய தோழியடி நீ எனக்கு!

நல்லவழி

படம்
தவறான வழியில் நடக்காமல் தர்மத்தின் வழியில் நடந்தால் தன்னிறைவான பயணத்தில் தடைகள் வந்தால் விலக்கி தலைநிமிர்ந்துது வாழலாம்! தரணியை ஆளலாம்!

கனவு

படம்
வண்ண வண்ணக் கனவுகள்.. வாழ்க்கை பற்றிய கனவுகள்.. சின்ன வயதுக் கனவுகள்... சிங்காரக் கனவுகள்.. கண்ணுக்குள்ளே இருக்குதம்மா.. காணாமலே போனதம்மா.. நீரில் போட்ட கோலங்களாய் நிறைவேறாமல் போனதே!

நினைவலைகள்..8

பயணம் பலவிதம்..! அழகழகான வித்யாசமான நகரங்களை சுற்றிப் பார்க்கும் பயணங்களுக்கு முடிவு ஏது?அவற்றில் கிடைக்கும் அனுபவங்கள் பலப்பல! தமிழ்நாட்டில் வங்கி அதிகாரியான என் அப்பாவுடன் சென்னை, ஈரோடு, வேலூர், கரூர், முசிறி, நாகர் கோவில் என்று சுற்றிப் பார்த்ததோடு ஒவ்வொரு ஆண்டு விடுமுறையிலும் குடந்தை, தஞ்சை, ஊட்டி, திருப்பதி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, மேட்டூர், சாத்தனூர் என்று தமிழகத்தின்  பல ஊர்களுக்கும் அப்பாஅம்மா தம்பிகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த நாட்கள் இன்று நினைவில் மட்டுமே! கண்டு ரசித்த பிரபலமான இடங்கள் பலப்பல! வணங்கி வரம் வேண்டிய திருக் கோயில்கள் நிறைய்...ய! அப்பொழுதெல்லாம் மொபைல் காமிரா இல்லாததால் இன்றுவரை கண்டு ரசித்த காட்சிகள் கண்ணிலும் மனதிலும் மட்டுமே தெரிகிறது! திருமணத்திற்கு பிறகு தமிழ்நாட்டைத் தாண்டி கணவரோடு பல ஊர் வாசம்..பல இடங்களுக்கு பயணம். உத்திரப் பிரதேசம் (மதுரா ஆக்ரா) மகாராஷ்டிரம் (மும்பை கோலாப்பூர்)  பிள்ளைகளுடன் கர்நாடகா (பெங்களூர்) மத்திய பிரதேசம் (போபால்)பஞ்சாப்(சண்டிகர்)பெண்ணோடு  பீகார் (சமஸ்திபூர்), ஆந்திரா (ஹைதராபாத்) என்று பல மாநில வாசம்..! பிள்ளைகள் வெளிநாடு சென்றத

ஆதரவு தருவோம்..

படம்
  கல்வியும் சுகாதாரமும் அறியாத ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்பின்றி ஒதுக்கப்பட்ட முதியோர்களுக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகளுக்கும்  ஆதரவு காட்டி அவர்கள் வாழ்வு மலர ஆவன செய்வோம் நாம்!

பெண் திருமண ஷாப்பிங்..!

படம்
நினைவலைகள்..7 எனக்கு ஒரே செல்லப் பெண். மும்பையில் மருத்துவம் படித்து வந்தாள். அவளுடையது காதல் திருமணம். மாப்பிள்ளையும் அதே கல்லூரியில் சீனியர். கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் வருடம் காதல் வந்து விட்டது. பையன் குடும்பம் சிங்க மராட்டியர்கள்! பையன் மிகவும் மரியாதையானவன். எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவான். அவனுக்கு என் மகளின் நீண்ட தலைமுடி, மூக்குத்தி, ஒல்லி உடம்பு எல்லாம் பிடித்துவிட வந்தது காதல்! சின்ன சின்ன ஆசை படத்தில் மதுபாலா மாதிரி பெண் இருக்க ஆசையாம்! அதனால் இவளைக் கண்டதும் மயங்கி காதலில் விழுந்து விட்டான். 'மணந்தால் உன்னை மட்டுமே மணப்பேன்' என்ற கொள்கையோடு  இவளை மணக்க ஹீரோ ரேஞ்சில் அவன் எதுவும் செய்வதாக சொன்னான் என்பாள் வேடிக்கையாக! பழகிய வரையில் மிக நல்ல குணமுள்ள தைரியமான பையன் என்பதால் எங்களுக்கு சம்மதம். அவர்கள் வீட்டிலும் சம்மதிக்க திருமணம் நிச்சயித்தோம். என் பெண்ணுக்கு காலையில் தமிழ் முறையிலும் அதையடுத்து மராட்டிய முறையிலும் திருமணம்! என் மகளுக்கு மராட்டிய வழக்கப்படி  என்ன சீர் செய்வது எப்படி திருமணம் செய்வது என்று கேட்ட போது, 'உங்கள் வழக்கப்படி செய்யுங்கள்' என்ற

ஆற்றல்

படம்
  உலக மாந்தர் அனைவரும் அன்புடன் வாழ்ந்து ஆற்றல் பெருக்கி இன்பம் நிலைபெற்று ஈகையில் சிறந்து என்றும் ஏற்றமுடன் ஐயம் தெளிந்து ஒற்றுமையாக வாழ ஓராயிரம் வாழ்த்துக்கள். 🌸🌸🌸🌸 சிற்பியின் ஆற்றல் சிலையில் தெரியும்.. கவிஞனின் ஆற்றல் கவிதையில் தெரியும்.. குழந்தையின் ஆற்றல் அதன் செயலில் தெரியும்.. மாணவனின் ஆற்றல் படிப்பில் தெரியும்.. நல்ல மனிதனின் ஆற்றல் அவனது சிறந்த வாழ்க்கை முறையில் தெரியும்!