இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டம் எதுவரை?!

படம்
  என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பருவமும் ஒரு ஆட்டம்தான்! ஒன்றில் பந்தாக..அடுத்ததில் பேட்( bat)டாக..மற்றொன்றில் ஆடுபவராக..இன்னொன்றில் மைதானமாக! இறுதியில் ஆட்டம் முடிந்து வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானிப்பவன் அந்த இறைவன்தான். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..! பிறந்து 15 வயதுவரை சீரும் சிறப்புமாக வளர்க்கப் படுகிறோம். நம் ஆசைகள் மறுக்கப் படுவதில்லை. கேட்குமுன்பு எல்லாம் கிடைக்கும்.பெற்றோர் ஆலோசனைபடி படித்து முடித்து ஓரளவு உலகம் பற்றி அறிந்து கொள்கிறோம். எனினும் சரியான புரிதல் கிடைப்பதில்லை. 30வயது வரை..அடுத்து மேலே என்னபடிப்பது..என் வேலைக்குச் செல்வது..நாம் ஒரு முடிவெடுக்க பார்த்தவர் பழகுபவர் அவரவர் அனுபவம் கூற, எதிலும் குழம்பிப் போகாமல் நம் வாழ்வை தீர்மானிக்கும் பருவம் இதுதான். இங்குதான் நம் ஆசைகள் பந்து போல் அடிபடுகிறது! நம் ஆசைப்படியா..பெற்றோர் விருப்பப்படியா என்ற மன வேற்றுமைகள். ஆசை முறையானபடி நிறைவேறுபவர்கள் வெல்கிறார்கள். அடுத்தது வாழ்வில் முக்யமான திருமணகாலம். அதிலும் காதல் மோதல் என்று பல நிலைகள். திருமணங்கள் யாரால் நிச்சயிக்கப் பட்டாலும் விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் வெற்றி ப

இறுதி

படம்
வார இறுதி நாட்களில்  நேரம் கடந்து எழும்  சந்தோஷ தருணத்திற்கு நிகர் வேறு உண்டோ! எந்தக் கதைக்கும் இறுதி முடிவு என்று ஒன்று உண்டு.. அது சுபமாக இருந்தால் நமக்கு மகிழ்ச்சி!

மகளுக்கு கடிதம்

படம்
  என் அன்பு மகளே! அழுகையோடு அழகாக  அகிலம் வந்து உதித்த ஆசை மகளே! பெண் வேண்டும் என்று ஆசைப்பட்ட உன் அப்பாவின் செல்லமாகப் பிறந்த எங்கள் செல்வ மகளே! நீ தத்தி நடக்கும்போதும் மழலைமொழி  மிழற்றும் போதும் கண்கள் விரிய பேசும்போதும் கோபித்தால் விசிக்கும் போதும் எங்கள் வீட்டு தேவதையானாய்! அப்பாவின் செல்ல மகள்! அண்ணன் தம்பிகளின் அருமை சகோதரி! அவ்வப்போது அழகாய் அறிவுரைக்கும் என் அருமைத் தோழி மட்டுமல்ல.. என் அன்புத் தாயாகவும் தோற்றமளிக்கிறாய்! நீ மருத்துவரானபோது மனமகிழ்ச்சியில் வானத்தில் பறந்தேன் நான்! காதலித்தவனைக் கைப்பிடித்து காலம் முழுதும்  அவனுடன் வாழ காவியமாய் நீ புறப்பட்டபோது கண்கலங்கியது நீ மட்டுமல்ல.. நாங்களும்! குழந்தைகள் உனக்குப் பிறந்தாலும் குறையாத பாசமும் நிறைவான நேசமும் என்றைக்கும் காட்டும் அன்புமகள் நீ! நீ வருகிறாய் எனும்போதே நான் ஆனந்தத்தில் ஆவலாய்க் காத்திருக்கிறேன்... உன்னைக் காணவும் உரையாடி மகிழவும்! வாழ்த்துக்கள் பல! வாமகளே..வா!

விளையாட்டு

படம்
  எங்கள் காலனியில் அமைந்துள்ள பூங்காவில் நடந்து கொண்டிருந்தேன். அங்கு குழந்தைகள் விளையாடுமிடத்தில் இரு ஊஞ்சல்கள் உண்டு. அந்த ஊஞ்சலுக்கு ஓய்வே கிடையாது. குழந்தைகள் சென்றதும் பெரியவர்கள் அதில் ஆடுவார்கள்.  இரண்டு குட்டிகள் அங்கு விளையாட வந்தன. காலியாக இருந்த ஊஞ்சல் அவர்கள் கவனத்தை ஈர்க்க. ...எனக்கு இது..என்று இருவரும் ஆளுக்கு ஒன்றின் அருகில் சென்றனர். நான் நடந்து கொண்டே அவர்கள் செயலில் கவனம் பதித்தேன். ஒரு குழந்தை ஊஞ்சலில் ஏறி வீசி வீசி ஆடினான்! ...மெதுவா ஆடு. கீழே விழுந்து விடுவாய்...என்று எச்சரித்தேன்! இன்னொரு குழந்தை வெறும் ஊஞ்சலை கையால் ஆட்டிக் கொண்டிருந்தான்! நான் அருகில் சென்று...நீ உட்காருகிறாயா? ஆட்டுகிறேன்... என்றேன். வேண்டாம். எனக்கு ஊஞ்சலில் உட்கார்ந்து ஆட பயம்! அதான் ஊஞ்சலை மட்டும் ஆட்டுகிறேன்...என்றபோது எனக்கு சிரிப்பு வந்தது. குழந்தைகள் என்றும் குழந்தைகள்தான்! .

முடிவு

படம்
ணற நாளை என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியா தவறா என்பதை பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகளால்தான் அறிய முடியும். *****" ஒரு செயலை எப்படி செய்தால் சரியாக இருக்கும் என்பதை நாம் முடிவு செய்கிறோம்! அதன் சரியான முடிவை இறைவனே  செயல்படுத்து கிறான்! ******* சரியான முடிவு தைரியம் தரும்.. தவறான முடிவு படிப்பினை தரும்.. ******

பயம்

படம்
நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களால் நமக்கு எதுவும் ஏற்படுவதில்லை. அதைப் பற்றிய நினைவுகள்தான் நமக்கு பயத்தை உண்டாக்குகின்றன. ***** நமக்கு பிடித்த விஷயத்தை சுதந்திரமாகச் செய்ய முடியாமல் மற்றவர் என்ன சொல்வார்களோ என பயப்பட வேண்டியுள்ளது. 

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.(3)

படம்
  நாற்பது வருடங்கள் சென்னைக்கு உறவினர் வீடுகளுக்கும், விசேஷங்களுக்கும் வந்து போனதோடு சரி. '76ல் எனக்கு திருமணமானதும் திருச்சியில் வாழ்க்கை. நாங்கள் சென்னையில் settle ஆக விரும்பி என் கணவரின் வங்கிக் கடனில் 1976ல் சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோ அருகில் தனிவீடு வெறும் 40000 ரூபாயில் வாங்கினோம்.  ஆறு மாதத்தில் என் கணவருக்கு உ.பி.யில் மதுராவுக்கு மாற்றல். வீட்டில் வாடகைக்கு இருந்த வர்களால் நிறைய தொந்தரவு. என் கணவரும் அடிக்கடி வருவது கஷ்டமாக, இரண்டு வருடங்களில் விற்க வேண்டியதாயிற்று.  அந்த வீடு இருந்திருந்தால்  இன்று அதன் மதிப்பு கோடிகளில்! நானும் சென்னை வாசியாக இருந்திருப்பேன்! 2001லிருந்து மும்பையில் பத்து வருடங்கள். அச்சமயம் என் தம்பி வேளச்சேரியில் இருந்தபோது அம்மா அப்பாவைக் காண அடிக்கடி சென்னை பயணம்.  என் பிள்ளைக்கும் சென்னையில் வேலை கிடைக்க, நினைத்த நேரமெல்லாம் சென்னை கிளம்பி வந்து விடுவேன்! இப்படியெல்லாம் சென்னை ஆசை அவ்வப்போது நிறைவேறியது! மாட்டுப் பெண்ணுக்கு  சென்னை. 2011ல் என்  மகன் வேலை நிமித்தம் சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் குடியேறினோம். எதிரில் கீழ்ப்பாக்கம் மருத்துவம

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)

படம்
  சென்னையின் நினைவுகள் சொல்லி மாளாது! 1965ல் இந்திய பாகிஸ்தான் போர் நடந்தபோது 'சங்கு ஊதும் போதெல்லாம் வெளியில் யாரும் வரக்கூடாது. தெருவில் அப்படியே படுத்து விட வேண்டும்' என்ற அறிவிப்பு ரேடியோவில் கேட்கும்போது வெளியில் போகவே பயமாக இருக்கும். வெளியூர் சொந்தங்களின் வீட்டுக்கெல்லாம் போனால் 'நீ மெட்ராஸ்காரியாச்சே' என்பார்கள்! நாங்கள் கோடம்பாக்கம் அருகில் இருந்ததால் 'சிவாஜி, M.G.R., பத்மினி, K.R.விஜயாவை யெல்லாம் பார்த்திருக்கியா' என்று விழி விரியக் கேட்பார்கள், நாங்கள் ஏதோ ஸ்டூடியோவிலேயே குடியிருப்பது போலவும், அவர்கள் எங்கள் வீட்டு வழியே தினமும் நடந்து செல்வது போலவும்!! சென்னையை சுற்றிப் பார்க்கவென்றே அடிக்கடி உறவினர்கள் வருவார்கள்! LIC  கட்டிடம் அந்நாளைய கண்காட்சித் தலம்! அதைக் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து ஆச்சரியப் பட்டதுண்டு!இன்று அதைவிட உயரமான அடுக்கு மாடிக் கட்டிடங்களில் குடியிருக்கிறோம்! ஒருமுறை விஜய வாஹினி ஸ்டூடியோவில் ஷூட்டிங் பார்த்ததுண்டு. ஒரே காட்சியை பல தடவை திரும்பத் திரும்ப  நடித்ததைப் பார்த்து 'ஐயோபாவம் நடிகர்கள்' என்ற எண்ணம்தான் தோன்றியது!

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1

படம்
  ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே!(1) இன்று நம் சிங்காரச் சென்னைக்கு 382வது பிறந்தநாள்! Madras Day என்று ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி  கொண்டாடப் படுகிறது.சென்னையின் மெரினா கடற்கரையும் மகாபலிபுரமும் உலகப் புகழ் பெற்ற இடங்களாயிற்றே! சென்னை..என் வாழ்வின் ஆரம்ப நாட்கள் சென்னையில்தான் ஆரம்பித்தது. அதை மறப்பதெப்படி? அன்றைய மதராஸ்க்கும்... இன்றைய சென்னைக்கும்.. அடேயப்பா..எத்தனை மாற்றங்கள்! 1961 முதல் '71வரை சென்னை வாசம். நாங்கள் குடியிருந்தது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கத்துக்கு நடுவில் இருந்த சூளை மேட்டில், பஜனை கோவில் தெருவில். நான் ஐந்தாம் வகுப்பு வரை கார்ப்பரேஷன் பள்ளியிலும், பின்  அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். அந்த நாட்கள் கவலையின்றி இருந்த கனாக்காலம்! பள்ளி வீட்டிற்கு அருகில்..மதியம்  வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு செல்வேன். நான்தான் பள்ளித் தலைவி. நான் நன்றாகப் பாடுவேன் என்பதால் தினமும் கடவுள் வாழ்த்து பாடுவதோடு பள்ளியின் எல்லா நிகழ்ச்சிகளிலும்  நான்தான் பாடுவேன். பள்ளியின் ஆஸ்தான பாடகி! கே.பாலாஜியின் முதல் வெற்றிப் படமான ‘தங்கை’ படத்தில் சிவாஜிகணேசனி

துணை

படம்
எத்தனை மனவருத்தமும் கோபங்களும் இருந்தாலும் அதனை நொடியில் மாற்றி என்னை சிரிக்க வைக்கும் நீ  என் துணையாக இருப்பது இறைவன் தந்த வரம்தான்!

முதுமை

படம்
எனதன்பு மனைவியே! முதுமை முழுதாக ஆட்கொள்ளும்போது எனக்கு தேவை  ஊன்றுகோல் அல்ல... உன் அருகாமை மட்டுமே! ******* தாங்கிப் பிடிக்க தோள் தரும் தங்கமான துணையிருந்தால் தள்ளாடும் முதுமையும் இனிமையான இளமையே!

வலி

படம்
வலி இல்லாத வாழ்க்கை எவருக்கும் இல்லை.. வலியை மறந்து வாழ்ந்திட வழிகள் இருந்தால் வாழ்வு என்றும் சுகமே!

அழகோவியம் தாஜ்மஹால்

படம்
  அழகின் சிகரம் அற்புதமான மாளிகை தாஜ்மஹால்! அழகிய அற்புத பரவசம் தரும்  வெள்ளை மாளிகை! காதல் இதயங்கள் உறங்கும் படுக்கை! காதலும் கண்ணீரும் கலந்த காவிய மாளிகை! யமுனைக் கரையில் ஒரு கண்கவர் அதிசயம்! ஷாஜஹானின் மனதில் தோன்றிய சித்திர மஹால்! சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான பளிங்குக் கோட்டை! உலக அதிசயங்களில் ஒன்றான கனவு மாளிகை! இந்தியாவின் பெருமைக்கும் சிறப்புக்கும் சான்றாக நின்று உலகைக் கவரும் காதல் மாளிகை தாஜ்மஹால்!

மகன்/மகள்

படம்
கண்ணே! கண்மணியே! உன் சின்னஞ்சிறு கால்களால் என்னை சிணுங்கியபடி உதைக்கும்போது உன்னை அள்ளி எடுத்து அழுந்த முத்தமிட்டேனடி! பாலூட்டி தாலாட்டி உன் ஒவ்வொரு அசைவிலும் உலகமே என்கையில் இருப்பதாக எண்ணி உனை உச்சிமுகர்ந்து உடல் சிலிர்த்தேனடி! மூன்று வயதில் சீருடையில் இரட்டை பின்னல் அசைய நீ பட்டுப்பாதங்களால் நடந்து செல்வதைக் கண்டு என் தங்கத்திற்கு பாதம் வலிக்குமே என்று உன்னை பள்ளிக்கு தூக்கி அழைத்துச் செல்வேனடி! பதின்மவயதில் மருத்துவக் கல்லூரி சென்றபோது 'என் மாணிக்கம் நாளை உயிர் காக்கும் மருத்துவர்'என்று மனதில் எண்ணி மனங்குளிர மகிழ்ந்திருந்தேனடி! நீ மணமகளாய் நின்றபோது 'உன்னைப் பிரிந்து எப்படி இருப்பேன்' என்று உள்ளம் உருகிக் கண்ணீர் வடித்தேன்! நீ தாயானபோது நான் பெற்ற மகிழ்ச்சியை உன்னிடம் கண்டேனடி! இன்றும் நீ அம்மா என்று ஓடி வந்து அணைக்கும்போது 'இவள் என் மகள்' என்ற பாசத்தில் பிரிய மனமின்றி கண் கலங்குகிறேன்! அன்புமகளே! வாழ்க நீ பல்லாண்டு! மகனுக்கு// கண்ணான கண்ணா! என் அன்பின் பொக்கிஷமே!இனிதான மழலை பேசி எனை மயக்கிய கண்மணியே! தலைமகனாய் பிறந்தாய்! என் தாய்மையை உணர வைத்தாய்! என் மடிம

மோனை கவிதைகள்

படம்
  அடி மோனை கவிதை கண்ணே..கனியமுதே! கட்டிக் கரும்பே! செல்வமே! கருவறையில் இருந்த உனைக் கண்ணும் கருத்துமாய் கவனித்து வருகிறேன் கவலை தீர்க்கும் உன் சிரிப்பு.. கண்டதும் உனை முத்தமிட கன்னலாய் இனிக்கும் உன் கன்னக் கதுப்புகள்.. கண்விரிய நீ சிரித்தாலோ கண்டவரின் மனம் மயங்கும்! கண்படுமே பிறரால் என்று கண்ணுக்கு கீழே மையினால் கருமையாக ஒரு பொட்டு கருத்தோடு இட்டேன்! நீ கல்வி கேள்விகளில் சிறந்து காவியப் பெண்ணாய் வளர கார்முகில் வண்ணன் கண்ணன் அருளட்டும்! சீர்மோனை கண்ணாளனே! கண்டவுடன் காதல்கொண்டேன்! காரிகை நான்  கல்யாணப்பந்தலிலே கன்னியுன் கரம் பற்றி கடமைகளை கருத்தாகக் கொண்டு  வாழக் காத்திருக்கிறேன்!

கை

படம்
இது நாம் காணும் பொற்காலம்.. கைக்கு அழகான  கைபேசியுடனான  கனாக் காலம்.. எவருடனும் நினைத்தவுடன்  பேசலாம்.. மறைந்து விட்ட தாயின்  முகம் காண வேண்டுமா? அலுவலின்போது பெற்ற குழந்தையைக்  காண வேண்டுமா? அத்தனையும் உள்ளங்கையில்! ****** நான் விழுந்தபோது தாங்கிப் பிடித்த கை.. மனம் தளர்ந்த போது தட்டிக் கொடுத்த கை.. கண்கள் அழும் போதெல்லாம் ஆதரவு தந்த கை.. அது அடுத்தவரின் கையல்ல.. எனது தன்னம்பிக்கை!

அணைப்பு

படம்
என் ஆருயிரே! உன் அன்பே  எனக்கு ஆதரவு! உன் அருகாமையே  எனக்கு ஆனந்தம்! உன் முத்தங்களே  எனக்கு ஆறுதல்! உன் அணைப்பே  எனக்கு சொர்க்கம்! என் அன்பே! இறுக்கி அணைக்கும் உன் காதலுக்காக  காத்திருக்கிறேன் நான்  இரவு வருவதற்காக!❤️ கண்ணே! கட்டிக் கரும்பே! உன்னை ஒவ்வொருமுறை அணைக்கும்போதும் இறுமாந்து போகிறேன் நீ என்னிலிருந்து உருவான பட்டுக் கண்மணி என்று!

பசி..(100 வார்த்தை கதை)

படம்
அமுதாவால் தாங்க முடியவில்லை. இரண்டு வயதுக் குழந்தை ரோஜா பசிபசி என்று அழும்போது செய்வதறியாமல் கண் கலங்கினாள். கட்டிய கணவன் நல்லவனாக இருந்திருந்தால் இன்று இந்நிலை வருமா? சரவணன் ஒரு சோம்பேறி. வேலை செய்வதையே வெறுப்பவன். மனைவி, குழந்தை பற்றி சிறிதும் கவலைப் படாதவன்.  அவன் திருடன் என்பதால் அமுதா எங்காவது வேலை தேடிச் சென்றால்...நீயும் உன் கணவன் மாதிரி திருடமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?...என்பார்கள்.  ஒரு பணக்காரர் வீட்டில் திருடிய சரவணன் போலீசில் மாட்டிக்கொண்டு சிறைக்குப் போனபின் அவள்பாடு திண்டாட்டமாகியது. வழியின்றி ஒரு கோவில் வாசலில் பிச்சை எடுக்க அமர்ந்தாள். அச்சமயம் அங்கு வந்த ஒரு பெண் ரோஜாவின் அழகில் மயங்கினாள்.  அமுதாவைத் தன்னுடன் வந்து வீட்டுவேலை செய்யும்படியும், குழந்தையைத் தான் நன்கு வளர்ப்பதாகவும் கூறி அழைத்துச் சென்றாள். எப்படியோ ரோஜாவைப் பசியின்றி வளர்க்கவும் தனக்கு பாதுகாப்பாக ஒருஇடம் கிடைக்கவும் வழிகிடைத்ததை எண்ணி அந்தப் பெண்ணுடன் சென்றாள்.

பசி

படம்
  ஏழையிடம் இருப்பது பசி.. பணக்காரனிடம்  இல்லாததும்  பசியே!

விடுகதை விளையாட்டு

படம்
மழையில் நனைவான்.. காய்ச்சல் வராது. வெயிலில் காய்வான் வியர்வை வராது. அவன் யார்? ...குடை, செருப்பு பெயரோ மூன்றெழுத்து! நிறமோ வெள்ளை! அவள் இல்லாத வீடு இல்லை! யாரந்த அழகி? ...பஞ்சு, பல்பு அடி வாங்கி அடி வாங்கி  ஊருக்கு சேதி சொல்வான்! ஆனால் அழ மாட்டான்! அவன் யார்? ...தண்டோரா கன்னங்கரேல் என்றிருப்பேன்.. காரிருள் அல்ல! கானம் பாடித் திரிவேன்.. வானம்பாடி அல்ல! நான் யார்? ...குயில்

பெயர்

படம்
மரங்களுக்கும் பறவைக்கும் விலங்குக்கும் பெயரில்லை.. நமக்கு மட்டுமே ஆளுக்கு ஒரு பெயர்.. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு பொருள்.. அந்நாளில் வைத்த பெயர்கள் பொருள் பொதிந்தவை.. அருள் தரும் கடவுளரின் அற்புத நாமங்கள் அவை.. இந்நாளில் வைக்கும் பெயர்களோ வாயில் நுழையாத புதுமைப் பெயர்கள்! பலமுறை கேட்டும் மனதில் நிற்காத மாடர்ன் பெயர்கள்!!

என் வாழ்க்கை..என் எண்ணம்!

படம்
நாம் பிறந்து வளரும்போது நம் வாழ்க்கையின் இலக்கு பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. நமக்கு எல்லா வசதிகளும் செய்ய நம் பெற்றோர் இருக்கிறார்கள் என்ற நிம்மதி. நானும் அப்படித்தான் படித்து முடித்தேன். கல்லூரிப் படிப்பு தேவையில்லை என்ற என் பெற்றோரின் முடிவுக்கு கட்டுப்பட்டு 18 வயதில் திருமணம். அப்பொழுதெல்லாம் மணியனின் பயணக் கட்டுரைகளைப் படித்து பாரிஸையும், சுவிஸ்ஸையும், லண்டனையும் வாழ்வில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதெல்லாம் நடக்காது என்று மனது சொல்லும். அப்பொழு தெல்லாம் மும்பை டில்லிக் காரர்களையே 'ஆ' வென்று வாய் பிளந்து பார்ப்போம். நான் படித்து வளர்ந்தது சென்னை யானாலும் என் அப்பா வங்கி யில் பிறகு சிறிய ஊர்களுக்கு மாறுதல்.என்னையே ..மெட்ராஸ் எப்படிங்க இருக்கும்? ஊருக்குள்ளயே கடல் இருக்குமாமே..என்றெல்லாம் கேட்டவர்கள் உண்டு! என் கணவருக்கு மதுரா மாற்றல் ஆக... நீ டில்லி, ஆக்ரா தாஜ்மஹால் எல்லாம் பார்க்கலாம்...என்றார்கள். அங்கு டில்லி, ஆக்ரா, வாரணாசி, ஜெய்ப்பூர், உதய்பூர், ஹரித்வார், ரிஷிகேஷ் எல்லாம் பார்த்தபின் மீண்டும் தமிழகத்தில் பாபநாசம் (குடந்தை அருகில்) கிராமத்துக்கு மாற்றல்! அப்பொழ

நன்றி சொல்கிறேன் 🙏🏼

படம்
என்னை இவ்வுலகிற்கு கொண்டு வந்து என்னைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து நற்குணங்களையும் கல்வியையும் கொடுத்து என்னுள் மனிதத்தை உருவாக்கிய என் பெற்றோருக்கு முதல் நன்றி🙏🏼 பக்தி ஒன்றே உன்னை இறைவனிடம் நெருங்க வைக்கும் என்பதை உணர்த்திய என் இஷ்ட தெய்வத்திற்கு நன்றிகள் பலப்பல கோடி🙏 நன்றி என்றதும் என் நினை வுக்கு வருவது சமீபத்தில் எங்கள் நோயை சரி செய்த  ஹைதராபாத்தில் இருக்கும் என் மாப்பிள்ளையும் பெண்ணும்தான். ஆம். ஒரு மாதம் முன்பு எங்களை ஆட்டி வைத்த கொரோனாவிலிருந்து குணமடைய எங்களுக்கு சரியான நேரத்தில் விபரங்களைச் சொல்லி மருந்துகளைச் சொல்லி எங்களை அந்தக் கொடிய கொரோனாவிலிருந்து மீண்டுவர வைத்ததற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. சென்ற மாதம் ஒருநாள் என் கணவருக்கு உடல்வலி, தலைவலி இருந்தது. 'வேலையினால் இருக்கும்' என்று வலி மாத்திரை சாப்பிட்டவருக்கு மறுநாள் காய்ச்சல். என் பெரிய பேத்திக்கு தொண்டை வலி. எனக்கும் ஜலதோஷம் வர, என் மகளிடம் கேட்டோம். சாதாரண வலி காய்ச்சல் மாத்திரைகள் சாப்பிட்டும் குறையாமல் இருக்க, உடனே என் மாப்பிள்ளை RT-PCR Test எடுக்கச் சொன்னார். அதில் பாஸிடிவ் வர அடுத்து மருந்து மாத்

கவிதையில் அந்தாதி..

படம்
அம்மா நீயே எந்தன் தெய்வம்.. தெய்வம் போலே என்றும் காப்பாய்.. காப்பாய் என்றும் சீரும் சிறப்பாய்.. சிறப்பாய் வாழ்ந்திட வழிகள் சொன்னாய்.. சொன்னாய்  எனக்கு நல்லன எல்லாம்.. எல்லாம் இருந்தும் உந்தன் நினைவு.. நினைவுகள் என்றும் மறப்பது இல்லை.. இல்லை எனக்கு குறைகள் என்றும்.. என்றும் எனக்கு துணையிரு அம்மா!

ஆரம்பம்

படம்
துன்பம் கண்டு துவண்டு விடாதே.. இன்னல் கண்டு ஒதுங்கி விடாதே.. இடையூறு கண்டு பயந்து விடாதே.. தடைகளைக் கண்டு தளர்ந்து விடாதே.. ஒன்றின் முடிவே மற்றதின் ஆரம்பம்.. ஆரம்பத்திற்கு என்றும் முடிவில்லை.. இதுவே அகிலத்தில் என்றும் மாறாதது!

காதல்

படம்
என்னைக் காதலுடன்  நீ காணும் போதே  உணர்கிறேன்  உன் உள்ளத்து  உணர்ச்சிகளை! இருவரும் இணைந்து  இனிதாய் வாழ்வோம்!

திருமணம்

படம்
இரு வேறுபட்ட குணங்களை உடைய இருவர் இதயங்கள் அன்பு காதல் பாசம் நேசம் இவற்றால் இணைந்து வாழும் திருமண வாழ்க்கை என்றும் குதூகலத்துடன்  நீடிக்கும்! ******** சாதியும் சாதகமும் பார்த்து வேலையும் சம்பளமும் பார்த்து வீடும் வசதியும் பார்த்து பணமும் பவுனும் பார்த்து சொத்தும் சொகுசும் பார்த்து அழகும் அந்தஸ்தும்  பார்த்து செய்யும் திருமணம் இறைவன் போட்ட முடிச்சாம்! வேடிக்கைதான்!

வெற்றி நமதே!!!

படம்
வெற்றி நமதே!!! வெற்றியின் இடத்தை முடிவு செய்து வெற்றியின் தூரத்தை அளவிட்டு கடக்க போகும் நேரத்தை கணக்கிட்டு தயங்காமல் புறப்பட்டால்  வெற்றி நமதே!!! வாழ்வில் வெற்றி கிட்டும் போதெல்லாம்  நம் தோல்விகள் நினைவுக்கு வந்தால் வெற்றிகள் என்றும் நம்மை விட்டுப் போகாது! பார்வைக்கு விழிகள் தேவை! வாழ்வுக்கு வலிகள் தேவை! வெற்றிக்கு முயற்சி தேவை! முயற்சியும் பயிற்சியும்  நம்பிக்கையும் இருந்தால் வெற்றி நமதே!

முத்தம்

படம்
  கண்ணே! கட்டிக் கரும்பே! உன் மத்தாப்பு சிரிப்பில் உள்ளம் கொள்ளை போகுதம்மா! மாம்பழக் கன்னத்தின் செம்பவளக் குழிவினில் என் மனமே வானில் பறக்குதம்மா! பிஞ்சு கரங்கள் மேனி தொட   நெஞ்சில் இன்பம் பெருகிட கொஞ்சித் தந்தேன் முத்தங்கள்! அள்ளி அணைக்கையிலே உள்ளம் மகிழ்ந்திட நீ தந்த  முத்தத்தில் உன்மத்தம்  ஆனேன் நான்! ஓவியத்தில் எழுத முடியாத  காவியச் சித்திரமே!  உன்னைக் கட்டியணைத்து  முத்தமிட ஆசை கொண்டேன்!

முத்தம்

படம்
மதுவினும் மயக்கும் தன்மை.. உதட்டில் எழுதிய கவிதை.. படபடக்கும் அழகிய இமைகள்.. பேசத் துடிக்கும் இதழ்கள்.. இதமும் இனிமையும் தரும்.. அதுவே இதழ்கள் இணைந்து அழுந்தத் தரும் இனிய முத்தம்! நான் கேட்டுக் கொடுத்த முத்தம்.. அந்த நிமிட இன்பம்.. கேளாமல் நீ கொடுத்த முத்தம் அந்த நாள் முழுதும் இன்பம்!

நினைவுகள்

படம்
 நினைவுகள் மறப்பதில்லை.. நினைவுகள் மறைவதில்லை.. நினைவுகள் அழிவதில்லை.. நினைவுகள் அகலுவதில்லை.. நினைவுகளில் நமக்கு பிடித்தவையும் உண்டு.. நினைவுகளில் நாம் வெறுத்தவையும் உண்டு.. நினைவுகள் வரும்போதெல்லாம் கண்ணீரும் வருகிறது... நினைவுகளில் சில சந்தோஷமும் தருகிறது... நினைவுகளில் நீந்தும் கனவுகள் அவை இன்பமோ துன்பமோ வாழ்வின் இறுதிவரை தொடர்கிறது!

நிதானம்

படம்
தானத்தில் சிறந்தது நிதானம்.. சாதனை செய்ய விரும்பினால் அவசியம் தேவை நிதானம்.. வாழ்வில் உயர வேண்டு மெனில் நிச்சயம் தேவை நிதானம்.. பிரச்னைகள் ஏற்படும்போது கண்டிப்பாக வேண்டும் நிதானம்..  கோபம் வரும்போது வார்த்தைகளை விடாமல் இருக்க தேவை நிதானம்.. நிதானத்தோடு இருப்போம்.. சமாதானமாக வாழ்வோம்!

உறவு

படம்
எதுவும் நிரந்தரம் இல்லாத  உலக வாழ்வில்  உறவுகள் நிரந்தரம் என எண்ணுவதே நம் பலவீனம்.. எத்தனையோ உறவுகள் எனக்கென்று இருந்தாலும் எனையாளும் ஒரே உறவு என்றும் நீதானடி என் அன்பே!