...அப்பா அப்படியே இரு. ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறேன்... என்றால்,... கொஞ்சம் இருடி! தலை வாரி, பவுடர் போட்டு, விபூதி இட்டு வருகிறேன்...என்று சோம்பல்படாமல் அலங்காரம் செய்து கொண்டு போஸ் கொடுப்பதை என்னால் மறக்க முடியவில்லையே அப்பா. உன்னைப் பார்க்க ஆசை வரும்போதெல்லாம் அந்த புகைப்படங்களைத்தான் பார்க்கிறேன்.
"ஏங்க குழந்தைகளோட எங்கேயாவது போய்ட்டு வரலாமா" மாலதி கேட்டாள். "குழந்தைகளையே கேட்கலாம்" என்றான் IT கம்பெனியில் வேலை செய்யும் மாதவன். "ரமண், சுமன் இங்க வாங்க. நாம ஜாலியா வெளிய எங்க போலாம்?" "ஹைய்யா..பீச்சுக்கு போலாம்பா" குழந்தைகள் சற்று நேரம் தண்ணீரில் விளையாடிவிட்டு மணலில் வீடு கட்டி அதில் அறைகளைத் தடுத்து உள்ளே நாற்காலி டி.வி. எல்லாம் செய்தார்கள். மாலதியும் மாதவனும் தாங்கள் வாங்கப் போகும் வீடு பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். "யார் வீடு அழகா இருக்குனு அப்பா அம்மாவைக் கேக்கலாமா?"என்று பெற்றோரை அழைத்தனர். மாதவன் ஐந்து வயது சுமனிடம் "ரமண் வீட்டில் இரண்டு பெட்ரூம் இருக்கு. உன் வீட்டில் ஒரு ரூம்தானே இருக்கு" "நான் பெரியவனானதும் நீங்களும், அம்மாவும் நம்ம தாத்தா,பாட்டி இருக்கற ஹோமுக்கு போயிடுவீங்களே. அதனாலதான்"என்றதைக் கேட்டதும் இருவரும் சம்மட்டியால் அடிபட்டதுபோல் உணர்ந்தார்கள். உண்மையைச் சொல்லும் துணிச்சல் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே!(1) இன்று நம் சிங்காரச் சென்னைக்கு 382வது பிறந்தநாள்! Madras Day என்று ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப் படுகிறது.சென்னையின் மெரினா கடற்கரையும் மகாபலிபுரமும் உலகப் புகழ் பெற்ற இடங்களாயிற்றே! சென்னை..என் வாழ்வின் ஆரம்ப நாட்கள் சென்னையில்தான் ஆரம்பித்தது. அதை மறப்பதெப்படி? அன்றைய மதராஸ்க்கும்... இன்றைய சென்னைக்கும்.. அடேயப்பா..எத்தனை மாற்றங்கள்! 1961 முதல் '71வரை சென்னை வாசம். நாங்கள் குடியிருந்தது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கத்துக்கு நடுவில் இருந்த சூளை மேட்டில், பஜனை கோவில் தெருவில். நான் ஐந்தாம் வகுப்பு வரை கார்ப்பரேஷன் பள்ளியிலும், பின் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். அந்த நாட்கள் கவலையின்றி இருந்த கனாக்காலம்! பள்ளி வீட்டிற்கு அருகில்..மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு செல்வேன். நான்தான் பள்ளித் தலைவி. நான் நன்றாகப் பாடுவேன் என்பதால் தினமும் கடவுள் வாழ்த்து பாடுவதோடு பள்ளியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் நான்தான் பாடுவேன். பள்ளியின் ஆஸ்தான பாடகி! கே.பாலாஜியின் முதல் வெற்றிப் படமான ‘தங்கை’ படத்தில் சிவாஜிகணேசனி
கருத்துகள்
கருத்துரையிடுக