அம்மாவின் கைமணம்(100 வரி)

லக்ஷ்மியின் மாமனார் மாமியாருக்கு சதாபிஷேகம். வீடு முழுதும் உறவுகள்!லக்ஷ்மிக்கு இரண்டு பிள்ளை, ஒரு பெண். மூவரும் வெளிநாட்டுவாசம். ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் கடைசி பிள்ளை தருணுக்கு  திருமணமாகவில்லை. அவன் அம்மாபிள்ளை. 


சதாபிஷேகத்திற்கு உறவினர்கள் பலர் வந்திருந்ததால் வீட்டோடு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்திருந்தாள். இன்றுதான் எல்லோரும் கிளம்பிச் சென்றபின் 'அப்பாடா' என்று சற்று கால் நீட்டி அமர்ந்தாள் லக்ஷ்மி. கடைக்குட்டி பிள்ளை வந்து அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான். 


'என்னடா வேண்டும்? நாலஞ்சு நாளா நல்ல சாப்பாடு சாப்பிட்டயா? அங்கதான் நீயே ஏதோ பண்ணி சாப்பிடறயே. '


'அட போம்மா. நான் அதுக்காகவா வந்தேன். உன் கையால ஒரு  பூண்டுரசம்  சாதம் சாப்பிடணும்.அந்த ருசி எதில?'


'அட அசடே..அதான் டல்லா இருக்கியா? இதோ சாயந்திரமே பண்ணிப் போடறேண்டா'.


'அம்மா..கூடவே அந்த கத்தரிக்காய் ரசவாங்கியும் பண்ணிடு.'இது பெண் பூரணியின் ஆர்டர்.

அது என்னவோ அம்மாவின் கைமணத்துக்கு இணையேது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)