இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க நீ பல்லாண்டு!

படம்
அன்புக் கவிஞரே! தங்கள் உருவம் எளிது! பாடும் குரலோ இனிது! என்றும் எமது கண்களில் தெரியும் உங்கள் புன்னகையும் காதுகளிலும் ஒலிக்கும்  தேன் அமுதக் குரலும் தங்கள் இனிய குணங்களால் எம் உள்ளத்தில் வாழ்கிறீர்! வாழ்க நீ பல்லாண்டு! உலகம் உள்ளவரை உன் பாடல்கள் வாழும்!

3.பிள்ளை வரம் வேண்டி..(100வரிகதை)

படம்
இன்று வெள்ளிக்கிழமை. காலை கோவிலில் யாரோ செய்த அன்னதான சாப்பாடு கண்களைக் கிறங்க வைக்க அசந்து போய்த் தூங்கி விட்டார் இசக்கிமுத்து.  மாலை நேரம் பக்தர் கூட்டம் அதிகம் வந்தால் சில்லறைகள் கூட சேரும் என்ற அவசரத்தில் தான் வழக்கமாக அமரும் இடம் நோக்கி வேகமாகச் சென்றார். அங்கு புதிதாக ஒரு கிழவி அழுக்கில்லாத புடவையுடன் அவர் இடத்தில்! ...ஏம்மா நீ பிச்சைக்கு புதுசா? நல்ல டிரஸ் போட்டிருக்க. எங்களுக்கு போட்டியா இங்கயும் வந்துட்டயா?... ...அட போப்பா. முப்பத்தஞ்சு வருஷம் முன்னாடி பிள்ளை வரம் வேண்டி இதே கோவில்ல 48 நாள் பிச்சை எடுத்த அனுபவம் இருக்குப்பா... அதிர்ச்சியில் ஆடிப் போய்விட்டார் இசக்கிமுத்து!

உணவு

படம்
பசிக்கு உணவு சாப்பிடும்போது அதன் ருசியை நாம் உணர்வதில்லை.. பசியில்லாமல் சாப்பிடும்போது அது ருசியாக இருந்தாலும் சாப்பிட முடிவதில்லை. ****** உணவு உடை இருப்பிடம் தந்து நம்மைக் காப்பாற்றும் இயற்கையை நாம் மாசுபடுத்துவது நம்மையே சிறிதுசிறிதாக அழித்துக் கொள்வது போல் என்பதை அறியவில்லையே நாம்..

அப்பா உங்களுக்காக...

படம்
  அப்பா உங்களுக்காக... அப்பா..அவர் ஒரு சரித்திரம் அப்பா என்றதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும் போதே மனம் சிலிர்க்கிறது..கண்கள் குளமாகிறது..! முதல் குழந்தை பெண்தான் வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டு பிறந்தவளாம் நான் என்று என் அம்மா சொல்வார். எனக்கு கீழே மூன்று தம்பிகள் இருந்தாலும் என் மீது ஒரு தனி பாசம் என் அப்பாவுக்கு என்பதை நான் பலமுறை உணர்ந்ததுண்டு. என் இரண்டு வயதிலிருந்தே மாலையில்  அலுவலகத்திலிருந்து அப்பா எப்பொழுது வருவார் என்று வாசலிலேயே காத்திருப்பேனாம். அப்பாவும் பிஸ்கட் சாக்லேட் என்று ஏதாவது வாங்கி வருவாராம். அப்பா வந்ததும் அன்று நடந்ததெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டே அவரை உடை மாற்ற விடுவேனாம்! நான்கு வயது வரை வெளியில் சென்றால் அப்பாவை என்னைத் தூக்கி வரச் சொல்லி அடம் செய்வேனாம்! நான் படிக்கும் நாட்களில் எனக்கு கணக்கில் சந்தேகம் வந்தால்(எனக்கு கணக்கு வராத பாடம்!) பொறுமையாக சொல்லித் தருவார். எனக்கு கல்லூரி சென்று படிக்க ஆசை இருந்தும் அப்பாவிற்கு இஷ்டமில்லாததால் அனுப்ப வில்லை. நானும் அத

1.கைக்கடிகாரம்

படம்
அப்பாவின் முத்தான பத்து.. அப்பா அந்த நாளைய சாவி கொடுக்கும் கைக்கடிகாரம்தான் கட்டுவார். நான் வெளிநாடு சென்று வந்தபோது ஒரு கைக்கடிகாரம் வாங்கி வந்து கொடுத்தேன். ஆசையாகக் கட்டிக் கொண்டார். அதில் ஸெல் ( cell) தீர்ந்ததும்...எனக்கு இதெல்லாம் சரிவராது. தினமும் கடிகாரத்துக்கு கீ கொடுப்பதுதான் எனக்கு பிடிக்கிறது என்றாரே பார்க்கணும்! நேரம் தவறாத என் அப்பா எங்கு சென்றாலும் சரியான நேரத்துக்கு செல்வார்.

2.மூக்கு கண்ணாடி

படம்
  2.மூக்கு கண்ணாடி படிக்கும்போது மட்டுமே கண்ணாடி போடும் என் அப்பா படித்து முடித்ததும் அந்தக் கண்ணாடியை துடைத்து  அதன் கூட்டில் வைத்து அதை அதற்கான இடத்தில் வைப்பதை தவற மாட்டார். கண்ணைப் பாதுகாப்பது போல் கண் பார்வைக்கு அவசியமான கண்ணாடியையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பார் என் அப்பா.  அவ்வப்போது நான் கண்ணாடியை எங்காவது வைத்து விட்டுத் தேடும்போது அப்பா நினைவு வரும்! 

3.பேன்ட்

படம்
என் அப்பா எப்பொழுதும் வேட்டிதான் கட்டுவார். ஒரு வங்கி அதிகாரியாக இருந்தும் அப்பா பேண்ட் போட்டதில்லை. கல்யாணத்தில் மாப்பிள்ளை அழைப்பிற்குக் கூட வேட்டி கட்டியவர் எங்கப்பாவாகத்தான் இருக்கும்! தனக்கு வேட்டிதான் வசதி என்பார்.  வெள்ளை வெளேர் பாலிஸ்டர்வேஷ்டியில் மிடுக்காகத் தெரிவார் என் அப்பா.அலுவலக மீட்டிங்குகளுக்கும் வேட்டிதான் அணிந்து செல்வார்! ...அப்பா பேண்ட்டில் உன்னைப் பார்க்க ஆசையா இருக்கு...என்றால், ...எனக்கு ஆசை இல்லையே பேண்ட் போட...என்று சிரிப்பார்!  'வேட்டிதான் பாரம்பரிய உடை. அதுதான் ஆண்களின் அழகான உடை' என்பது என் அப்பாவின் மாற்ற முடியாத கருத்து!

4.ஷர்ட்

படம்
  அப்பா..நீ போட்ட சட்டைகளில் கட்டத்தையோ,கோடுகளையோநான் ஒருநாளும் கண்டதில்லையே! முழுக்கை சட்டையும் நீ அணிந்ததில்லை! ரெடிமேட் சட்டைகளுக்கும் தடா! உனக்குப் பிடித்த வண்ணங்களில் துணி வாங்கிக் கொடுத்து தைத்த சட்டைகள்தான் உன்னை கம்பீரமாக தெரிய வைத்தன!என் அன்பு அப்பாவே! உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

5.காமிரா

படம்
...அப்பா அப்படியே இரு. ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறேன்... என்றால்,... கொஞ்சம் இருடி! தலை வாரி, பவுடர் போட்டு, விபூதி இட்டு வருகிறேன்...என்று சோம்பல்படாமல் அலங்காரம் செய்து கொண்டு போஸ் கொடுப்பதை என்னால் மறக்க முடியவில்லையே அப்பா.  உன்னைப் பார்க்க ஆசை வரும்போதெல்லாம்  அந்த புகைப்படங்களைத்தான் பார்க்கிறேன்.

6.கைப்பை

படம்
  என் அப்பா அலுவலகம் செல்லும் வரை ஒரு கைப்பை எடுத்துச் செல்வார். அதில்தான் அலுவலக விஷயங்கள் பர்ஸ் மதிய சாப்பாடு அத்தனையும் அழகாக எடுத்துச் செல்வார். ஓய்வு பெற்ற பின்பும் தனக்கு வேண்டிய முக்கியமான ஃபைல்களை அதில்தான் வைத்திருந்தார்.  அப்பாவின் அந்த ஒழுங்கும், சுத்தமும், எதையும் அதனதன் இடத்தில் சரியானபடி வைக்கும் குணமும் எனக்கு ஆச்சரியம் தரும் விஷயங்கள்!

7.பர்ஸ்

படம்
எனக்கு தெரிந்து என் அப்பா மூன்றோ அல்லது நான்கு பர்ஸ்தான் உபயோகித்திருப்பார் என நினைக்கிறேன். எளிதில் பர்ஸை மாற்ற மாட்டார். ஒரு வசதியான உறுதியான பர்ஸைத்தான் வாங்குவார்! அதில் ரூபாய் நோட்டுக்கள் சில்லறைகளைத் தனித்தனியாக எளிதில் எடுக்கும்படி வைத்துக் கொள்வார். பல நேரம் வேட்டியை கட்டி சொருகும் இடத்தில் பர்ஸை சுற்றி அதை இறுக்கமாக இடுப்பில் சொருகிக் கொண்டு மேலே சட்டை போடுவதால் எளிதில் கீழே விழாது..யாரும் பர்ஸைத் திருடவும் முடியாது என்பார்! அப்பாவின் திறமைகள் இப்படி பலப்பல!

8.கடிகாரம்

படம்
தினமும் காலை அலாரம் வைத்திருந்தாலும் அப்பா அதற்கு முன்பே எழுந்து விடுவார். பரீட்சை நேரங்களில் காலை நான்கு மணிக்கு அப்பா அலாரம் வைத்து எழுப்ப, அம்மா தேநீருடன் நின்றிருப்பார்.  அன்று ஆரம்பித்த இந்த விடிகாலை எழும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. மிக்க நன்றி அப்பா!

9. சுத்தியல்

படம்
  அப்பா சில ஆயுதங்களை மிக பத்திரமாக எங்கள் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்திருப்பார்.கத்தி கத்தரிக்கோல் சுத்தியல் ஆணி போன்ற எல்லா ஆயுதங்களும் அப்பா வசம் உண்டு! எதில் கோளாறு வந்தாலும் அதை தன் ஆயுதங்களை வைத்தே சரி செய்யும் திறமை அப்பாவுக்கு உண்டு! நல நேரங்களில் ஒழுகும் குழாயையோ, சரியாக எரியாத அடுப்பையோ மிக சுலபமாக அப்பா சரி செய்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். என் அப்பாவின் திறமை யாருக்கு உண்டு என்று இறுமாந்த தருணங்கள் அவை!

10.பரிசு..கிஃப்ட்

படம்
  ஒருமுறை அப்பாவுக்கு...அப்பா இன்னிக்கு தந்தையர் தினம். இந்தா உனக்கு கிஃப்ட்...என்று ஒரு வேட்டி சட்டை கொடுத்து நமஸ்கரித்தேன். அப்பாவுக்கு ஒரே மகிழ்ச்சி...அட அப்பாக்கள் தினமெல்லாம் உண்டா? எனக்கு தெரியாதே...என்றவர்,  ...எனக்கு நீயே ஒரு கிஃப்ட்தான். தீர்க்காயுசா இரு.. என்றவர் உடனே வேட்டியைப்  பிரித்து கட்டிக் கொண்டு சட்டையைப் போட்டுக் காட்டினார். அதற்கடுத்த வருடம் தந்தையர் தினத்துக்கு முன்பே அப்பா மறைந்து விட்டார். 

இசை

படம்
இசையில் மயங்காத மனிதரும் உண்டோ? தன்னையே மறக்கச் செய்வது இசை! இதழ்களின் இனிமையான உச்சரிப்பு  இசை! மனம் முழுதும்  நிறைந்து இன்பம் தரும்  இசை! தாலாட்டில் குழந்தையை மயங்க வைக்கும் இசை! பிறப்பு முதல் இறப்பு வரை வி தவிதமான இசை! இறைவன் படைத்த அதியங்களில் ஒன்று  இசை!

11.கடிதம்

படம்
அப்பாவுக்கு ஒரு கடிதம் அப்பா..உங்கள் அன்பு கடல் போன்றது.. வெளியே தெரியாது ஆனால் ஆழம் அதிகம். அப்பா..உங்கள் அன்பை விட சிறந்த அன்பு இந்த உலகில் எதுவும் இல்லை!. அப்பா..உங்களுக்கும், கடவுளுக்கும் சின்ன வேறுபாடு தான் கண்ணுக்கு தெரியாதவர் கடவுள். எனக்கு கடவுளாய் இருந்தவர் நீங்கள்! உங்கள் தோள்கள் எனக்கு ஒரு காலத்தில் விலை மதிப்பற்ற சிம்மாசனம்..உங்கள் மடி விலை உயர்ந்த பட்டு மெத்தை! அப்பா..உங்கள் அன்பை மிஞ்சும் அளவு வேறு எந்த அன்பும் இந்த உலகில் இல்லை! அப்பா..உங்களை வணங்குகிறேன்..உங்கள் ஆசியை வேண்டு கிறேன்..என்றும் எனக்கு துணையாக இருக்க இறைஞ்சுகிறேன்!

அந்த நாள் நினைவுகள்

படம்
மரத்தடியில் பாடம் படித்தோம்! அந்த நாள் நினைவுகள் எத்தனை..எத்தனை! சேலத்தில் முதல் வகுப்பு சேர்ந்து சில மாதங்களில் என் அப்பாவுக்கு சென்னை மாறுதல். நான் முதல் வகுப்பில்  நன்கு படித்ததால் இரண்டாம் வகுப்பு என்று அந்த தலைமை ஆசிரியர் எழுதிக் கொடுத்ததால் நான் சென்னையில் நுங்கம்பாக்கம் அரசு துவக்கப் பள்ளியில் சேர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அது பெண்களும் பையன்களும் இணைந்து படித்த பள்ளி. அறுபதுகளில் பெண் ஆசிரியைகள் மிகக் குறைவு. ஆண் ஆசிரியர்களே அதிகம். அப்பொழுதெல்லாம் எல்லா வகுப்பிலும் ஆசிரியர்கள் சரியாக படிக்கா விட்டாலோ, மதிப்பெண் வாங்கா விட்டாலோ ஒரு குச்சியால் அடிப்பதுண்டு. மாணவிகளை விட மாணவர்கள்தான் நிறைய அடி வாங்குவதோடு, சிவந்த அவர்களின் கைகளைப் பார்த்து எங்களுக்கே பாவமாக இருக்கும். 'என் பிள்ளையை ஏன் அடித்தீர்கள்?' என்று ஆசிரியர்களுடன் சண்டை போட்ட பெற்றோரும் உண்டு! நான்காம் வகுப்பு படித்தபோது சில பையன்களுடன் நாங்கள் பெண்கள் நட்பாகப் பழகிய துண்டு. ஒரு பையன் அவன் அப்பா ஏதோ நெருப்புப் பெட்டி மேல் ஒட்டும் அழகான கலர்ப் படங்களை தயாரிப்பதாக சொல்லி, எனக்கு மட்டும் தருவதை பல பெண்கள் ப

வார இறுதி கதை..

படம்
  அரவிந்த் காதலிக்கிறான்.. அவளும் கோபமா இருக்காளே..அம்மாவும் கோபமா இருக்காங்களே..இப்ப என்ன செய்யலாம்? அரவிந்துக்கு எதுவும் புரிய வில்லை. அரவிந்த் அவன் பெற்றோருடன் தாம்பரத்தில் இருக்கிறான். ஒரு வெளி நாட்டு தகவல் தொழில்நுட்பக் கம்பெனியில் நல்ல வேலை. அடிக்கடி வேலை விஷயமாக வெளிநாட்டுப் பயணம் செல்வான். அப்பா ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. அவனுக்கு ஒரே அக்கா அனிதா. இரண்டு வயதே பெரியவள். திருமணமாகி மைலாப்பூரில் கணவருடன் வாசம். நேற்று ஞாயிற்றுக் கிழமை. அனிதா வீட்டுக்கு வந்திருந்தாள். எப்பொழுதும் போல் அம்மாவும் அனிதாவும் அரவிந்தின் கல்யாணம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அனிதா ஜாதகம் சேர்ந்திருப்பதாகப் பல புகைப்படங்களைக் காட்டினாள். நல்ல வேலை, அழகு, நல்ல பணவசதி இருப்பவர்கள், நிறைய சீர் செனத்தி செய்பவர்கள் என்று சில பெண்களை சொல்லி பெண் பார்க்க போகலாமா என்றாள். அரவிந்த் எதிலும் பிடி கொடுக்காமல் பேசினான். ...என்னடா அரவிந்த் பெண் எப்படிதான் இருக்கணும்னு நினைக்கிறாய்?.z அம்மா. ...இத்தனை ஃபோட்டோவில் யாரையுமே பிடிக்கலையா?...கேட்டது அனிதா. ...அவனுக்கு யாரையாவது பிடிச்சிருக்கோ என்னவோ? அதை நீங்க ரெண்டு பேரும்

என் இனிய தோழி!

படம்
நாம் எங்கு சென்றாலும்,எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் 'அப்பாடா' என்று நம் வீட்டில் வந்து படுக்கும் சுகம் இருக்கிறதே, அதற்கு இணையே கிடையாது! எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும், வசதிக் குறைவுகள் இருந்தாலும் அது நம் சொந்த வீடு என்கிறபோது அவை காணாமல் போய் ஒரு நிம்மதி தோன்றுவதை எவரும் உணரலாம். சொர்க்கமே என்றாலும் நம்மூர் மட்டுமல்ல நம் வீட்டைப் போலவும் வராது! வங்கி அதிகாரியாக இருந்த என் கணவருடன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல்;  பல ஊர்களில், மாநிலங்களில்  வாசம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி வீடு! நமக்கு வேண்டியபடி எந்த இடமும் இருக்காது. ஒரு வீட்டை சரி செய்வதற்குள் அடுத்த மாறுதல் வந்துவிடும். பணிக்குச் செல்லாத இல்லத்தரசியாக குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் படிப்பு, வீட்டு வேலைகள் என்று காலம் இறக்கை கட்டிப் பறந்த நாட்கள் அவை! ஆனாலும் சொந்த வீடு ஆசை மட்டும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டிருந்தது. எனக்கு சின்ன வயதில் இருந்தே ஊஞ்சலில் ஆடப் பிடிக்கும். கும்பகோணத்தில் என் தாத்தாவின் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் ஊஞ்சலில் ஆட எங்களுக்குள் (என்னுடைய மாமா, பெரிமா, சித்தி குழந்தைகளுடன் ) சண்டை

இறக்கை

படம்
வானில் பறக்கும் பறவைகளைப் பார்க்கும் போதெல்லாம் ஏங்குகிறேன் எனக்கு அதுபோல் சுதந்தரமாக பறக்க இறக்கை இல்லையே என்று!

மாம்ஸ்ப்ரஸ்ஸோ..நீ வாழ்க..வளர்க..

கவிதை ********* கண் விழித்தவுடன் முகநூல் தரிசனம்! சங்கேதச் சொல் மட்டும்  சரியாகச் சொல்லி விட்டால் அலிபாபா குகைபோலே  அழகாக உட்புகலாம்! #புத்தம்புது_பூமி_வேண்டுமென நித்தமுமே ஆசைப்படலாம்! பயணச்சீட்டின்றி பயமின்றி  புவிமுழுதும் உலாவரலாம்! #சும்மா_இருக்காதே_நம்மனது! அத்தனை மனிதர்களின்  சுயவிபரம் அறியவும் அற்பமாய் ஆசைப்படுமே! தேசங்கள் கடந்து நேசக்கரங்கள் நீட்டும்..! நட்பாய் அறிமுகமாகி உறவுகளாய் பரிணமிக்கும்..! உலகை ஒருங்கிணைக்கும் ஒற்றையடி பாதை! #இதுவே_முகநூல்_உலகம்! மாம்ஸ்ப்ரஸ்ஸோ என்றொரு தளமுண்டு! மகத்தான திறமையுள்ள மகளிர் பலப்பலவுண்டு.. சமையல் மேடை மட்டுமே  சாஸ்வதமாய் நினைத்திருந்த சகதர்மிணிகளுக்கு  சகலகலைகளிலும் போட்டிகள் வைத்து பாராட்டி பரிசுகளும் தந்து...  #நெஞ்சுக்குள்_பெய்திடும்_மாமழையாய் மகிழச் செய்வர்! #தமிழுக்கு_அமுதென்று_பேர் அந்தத் தமிழே எனக்கு  ஆதாரமென அழகழகாய் அவர்களின் அனுபவங்கள் ஆயிரம் கதை சொல்லும்! வாசித்தோரின் விழி உயர்த்தி ..ஆஹா.இவளல்லவோ பெண்.. என்று ஆச்சரியமாய் பார்க்க வைக்கும் வித்யாசமான தளமிது! அவர்கள் பிள்ளைகளின் வீட்டினரின் திறமைகளையும் வெளிச்சம் போட்டு வெளிக் கொணரும்

புகைப்படங்கள்

படம்
என் குழந்தைகள் இப்போது இளைஞர்களாக இருக்கிறார்கள். அவர்களை சின்னஞ்சிறு குழந்தைகளாகக் கற்பனை செய்வது மிகக்கடினம்!  என்மகனும் மகளும்  நான் அண்ணாந்து பார்க்குமளவு உயர்ந்து விட்டார்கள்! ஆனால் நான் அவர்களை இன்னும் அன்றைய  குழந்தைகளாகத்தான் பார்க்கிறேன்! அவர்கள் வளர்ந்து விட்டதாக எனக்கு தோன்றவில்லை! அவர்களுடன் இனி நான் தாலாட்டவோ சாதம் ஊட்டவோ, கண்ணாமூச்சி விளையாடவோ, கட்டியணைத்து தூங்கவோ முடியாது. அவற்றை நினைவில் கொண்டுவர அவர்களின் குழந்தைப் பருவ புகைப் படங்களைப் பார்க்கிறேன். என் கண்கள் கசிந்து பாசத்தில் அந்தக் குட்டி உருவங்களைத் தடவிப் பார்க்கிறேன்.  அவர்கள் தவழ்ந்ததும் நடந்ததும் என்னைக் கட்டியணைத்து முத்தமிட்டு விளையாடியதையும் புகைப்படங்களில் காணும்போது என்மனம் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறது.  அம்மாக்களே, சிறியவர்களாக இருக்கும்போதே உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை அதிகம் செலவழியுங்கள்!அவர்களுக்கு நூறு முத்தங்கள் தந்து அன்பைக்காட்டுங்கள்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களோடு பேசுங்கள்..விளையாடுங்கள்! கண்டிப்பாக அவற்றை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் பின்னாளில் கண்டு மகிழ.. சந்தோஷப்பட..!

இனிய இல்லம்

படம்
எத்தனையோ இடங்களைச் சுற்றி வந்தாலும் நமக்கென ஒரு சொந்தவீடு வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. சென்னையிலும் குடந்தையிலும் வீடு வாங்கியும் விற்கும் நிலை.வங்கி அதிகாரியான என் கணவரின் மாற்றலால் பல ஊர்வாசம். கிடைத்த வீட்டில் வாழும் நிலைமை. பலஊர் பலநாடுகளைச் சுற்றி அலுத்த மனம் எளிமைக்கு ஏங்கியது.  இனிய இல்லத்திற்கான கனவோ மிகப்பெரிது! சிறிய கிராமத்தில் தூண்கள் அணிவகுத்து நிற்கும் திண்ணையுடன் பெரிய கூடம், அலமாரிகளுடன் அறைகள், வசதியான சமையலறை, நிலவொளி வீசும் மாடி, ஓய்வு நேரத்தில் வீசியாட ஊஞ்சல், இறைவனை வழிபட  தனி சுவாமிஅறை அத்தனையும் வேண்டும்.  வீட்டை சுற்றிலும் தோட்டம், விதவிதமாய் பூச்செடிகள், நீண்டு உயர்ந்த தென்னை மரம், இதமான தென்றல் காற்று, காலெட்டும் தூரத்தில் காவேரி என்று நான் விரும்பிய அத்தனை ஆசைகளும் நிறைவேறிய ஒரு அழகிய வீடு கட்ட எங்கள் குலதெய்வம் சுவாமிநாத ஸ்வாமி தன் ஆலயம் அருகிலேயே கிடைக்க அருளியதை  எண்ணி மெய்சிலிர்க்கிறேன்!

தலை தீபாவளியின் ஹீரோ!

படம்
தீபாவளி என்றாலே மனம் குதூகலிப்பதை மறுக்க முடியாது. அதிலும் தலைதீபாவளி என்றால் ஸ்பெஷல் ஆச்சே! நாற்பத்தைந்து வருடங்கள் ஓடி விட்டாலும் இன்றும் அந்த தீபாவளி நினைவுகள் மனதில் சுழல்வதை மற(று)க்க முடியுமா! என் தலை தீபாவளி ஒரு மறக்க முடியாத தீபாவளி. என் புகுந்த வீடு திருச்சி. என் கணவர் அங்கிருந்த வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். என் பெற்றோர் முசிறியில் இருந்தார்கள். முசிறி சிறிய , இயற்கை அழகுகள் நிறைந்த  கிராமம்.அந்தணர்கள் மட்டுமே  இருந்த  அந்தக்காலத்து அக்ரஹாரம். நல்ல அகலமான தெரு. அகண்ட காவேரி ஓடும் அழகான ஊர். என் அப்பா கரூர் வைஸ்யா வங்கியில் மேனேஜராகப் பணி புரிந்தார். பெரிய விசாலமான அந்தக்கால வீடுகள்.  நாங்கள் குடியிருந்த வீடும் அச்சு அசலான அக்ரஹாரத்து வீடு. வாசலில் பெரிய திண்ணை, ரேழி, கூடம், தாழ்வாரம், கிணறு, நீண்ட கொல்லைப்புறம் என்று பெரிய வீடு. அந்த வீட்டில்தான் என் திருமணம் நடந்தது. திருச்சியிலிருந்து முசிறி ஒருமணி நேரப் பயணம்.  தீபாவளிக்கு முதல்நாள் காலை எங்களை அழைத்துச் செல்ல என் தம்பி வந்திருந்தான்.  பஸ்ஸிலிருந்து இறங்கியவன், தான் வீட்டுக்கு செல்வதாகச் சொல்லி விரைந்து சென்றுவிட்ட
படம்
 “சுபா, இங்கே வா, இந்த வெற்றிலை, பாக்கு, பூ, ப்ளவுஸ்பீஸ் எல்லாம் வரிசையா, அழகா ட்ரேயிலே எடுத்து வை.” “இதோ வரேம்மா!” +2 படிக்கும் சுபா டீ.வி. யை அணைத்து விட்டு எழுந்து வந்தாள். காலை முதல் வித்யா இறக்கை கட்டிய மாதிரி பறந்து கொண்டிருந்தாள். இன்று சரஸ்வதி பூஜை. வித்யா வீட்டில் கொலு வைக்கும் பழக்கமில்லை. நவராத்திரி ஒன்பது நாளும் அம்மனுக்குப் பூஜை மட்டும்தான் செய்வாள். அவள் கணவன் சுந்தர் ஒரு நிறுவனத்தில் அதிகாரி. அடிக்கடி, ஊர் ஊராக மாறுவதால், சரஸ்வதி பூஜையன்று மட்டும் தெரிந்த பெண்மணிகளை அழைத்து மஞ்சள், குங்குமம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். கோவைக்கு வந்து மூன்று வருடங்களாகிறது. அடுத்த வருடம் எந்த ஊரோ? இங்கு சுந்தரின் அலுவலக நண்பர்கள், சுபாவின் சிநேகிதகள் மற்றும் தான் உறுப்பினராயிருந்த மாதர் சங்கத் தோழிகள் எல்லாரையும் இன்று அழைத்திருந்தாள். எதையும் அழகாக, பிறர் பாராட்டும்படி செய்ய வேண்டுமென ஆசைப்படுபவள் வித்யா. சிறு வயதில் அவள் தாய் வீட்டில் நவராத்திரியின் போது அவள் போடும் ரங்கோலியைப் பார்க்கவே அவ்வளவு பெண்களும் வருவார்கள். வித்யாவும் தினமும் ஒரு அலங்காரம் செய்து கொண்டு தெரிந்தவர், தெரி

திகிலான தீபாவளி

படம்
சில தீபாவளிகளை என்றும் மறக்க முடியாது. என் பிள்ளைக்கு  ஆறு வயதிருக்கும்போது நாங்கள் பட்டாசு பட்டணமான சிவகாசியில் வாசம்!  லார்ட் பட்டாசுகளைத்  தயாரிப்பவர்கள் வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம்.   எங்களுக்கு பக்கத்து வீட்டில் பட்டாசுகளைத் தரத்தை ஆய்வு செய்யும்  அதிகாரி குடியிருந்தார். பட்டாசு தயாரிப்பாளர்கள் அவர் வீட்டுக்கு விதவிதமாய் புதுமையான பட்டாசுகளைக் கொண்டு தருவார்கள். அத்தனை வாணங்கள், பட்டாசுகளையும் அவர் வெடிக்க நாங்கள் வேடிக்கை பார்த்தோம்.  காலனி முழுக்க ஒரே புகைமயம். நள்ளிரவில் என் மகனுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் வந்து, கண்கள் செருகி மயக்கமாகிவிட எங்களுக்கு பயமாகி விட்டது. அதிகப் புகையினால் அலர்ஜி ஆகிவிட்டது போலும். என் கணவர் எங்கள் வீட்டு சொந்தக்காரரிடம் டாக்டரை  விசாரிக்க, அவர் தானே தன் காரில் அவருக்கு தெரிந்த டாக்டரிடம்  அழைத்துச் சென்று, கூடவே இருந்து, சரியானதும் அழைத்து வந்தார். காலத்தில் அவர் செய்த அந்த உதவியையும் அந்தங் தீபாவளியையும் என்றும்  மறக்க முடியாது.

கற்பனை..

படம்
கவிதை எழுத  காதலும் வேண்டாம்...! கல்யாணமும்  தைவையில்லை...! கற்பனை மட்டும்  இருந்தாலே போதும்...!

ஈரம்

படம்
மனதில் ஈரம் கருணை! நிலத்தில் ஈரம் பசுமை! நினைவில் ஈரம் அன்பு! வாழ்வில் ஈரம் கொடை! கண்ணில் ஈரம் கண்ணீர்! மண்ணில் ஈரம் மாமழை! வாழ்வின் ஈரம் மனிதம்! வார்த்தையில் ஈரம் கருணை!

முத்தமும் சத்தமும்

படம்
சாதனாவும் சங்கரும் கடந்த ஒரு வருடமாகக் காதலிக்கிறார்கள்.  இருவருமே மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்கள்.  திருமணத்திற்கு இருவர் பெற்றோரும் ஒப்புதல் அளித்து விட்டார்கள்.  சங்கருக்கு ஒரு குறை. சாதனாவுக்கு  தன்னிடம் காதல் இருக்கிறதா என்று.  அவனை அணைப்பதில்   ஆர்வம் இருந்தாலும் அவனை  முத்தமிட அனுமதிப்பதில்லை.  திருமணத்திற்கு நாள் பார்த்து முடிவு செய்தாகி விட்டது.அன்று  சாதனா..மாலை சந்திப்போம்.. என்றாள். சங்கர் வீட்டில் யாருமில்லாததால் அவளை தன் வீட்டுக்கே வரச் சொன்னான்.  அவன் கையைப் பிடித்து பேசிக் கொண்டிருந்தவளின் கையில் ஆசையில் சட்டென்று முத்தமிட்டான். அதைத் தடுக்காத சாதனாவும்  அவனை முத்தமிட்டாள்.  ..நீ ஏன் இத்தனை நாளாக முத்தமிட  அனுமதிக்கவில்லை?..   முத்தமிட்டால் நாம் திருமணத்திற்கு முன்பு எல்லை மீறி விடுவோமென்று  பயந்ததாகச் சொன்னபோது சங்கர் சிரித்து விட்டான்!  ..காதலுக்கு முத்தமும் தேவை. கல்யாணத்திற்கு பிறகாவது முத்தமிட அனுமதிப்பாயா?..என்று அவன்  தலைசாய்த்து கேட்டபோது வெட்கத்தில் சாதனா முகம் சிவந்தா ள்.

விளையாட்டு (ப.கதை).. ஊஞ்சல் (பு.கதை)

படம்
எனக்கு வீட்டில் ஊஞ்சல் போட்டு ஆடும் ஆசை உண்டு.  என் கணவருக்கு   வடக்கே மாற்றல் ஆனதுடன் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை  மாறுதல்.  வாடகை வீடுகளில்  ஊஞ்சல் போட வழியில்லை. பத்து வருடங்களுக்கு முன்  சொந்தவீடு வாங்கி ஊஞ்சல் போட,  விடுமுறைகளில் என் பேரன் பேத்திகள் வந்து ஊஞ்சலாடி மகிழ்வார்கள். ஒருமுறை என் கணவரும், பேத்தியும் தொலைக்காட்சியில்  நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே  ஊஞ்சலாடிக்  கொண்டிருந்தார்கள். திடீரென்று பெரிய சத்தம். பயத்துடன் நான் ஓடிவர ஊஞ்சல் ஒரு பக்கக்கம்பி அறுந்து  இருவரும் கீழே விழுந்து பேத்தி ஒரே அழுகை. நல்ல வேளையாக  சின்ன சிராய்ப்புகள் மட்டுமே. பின் ஊஞ்சல் கம்பி மாட்டிய இடத்தில்  ஆழமாக சுவரை உடைத்து நன்றாக மாட்டினோம் . நல்ல வேளையாக விழுந்த வேகத்தில் கை காலில் எலும்பு முறிவுகள் ஏற்படாமல் இருந்ததே என்று எண்ணிக் கொண்டோம். இப்பவும் ஊஞ்சல் ஆடும் போது இந்த நினைவு வரத் தவறுவதில்லை.

மகிழ்ச்சி தரும் புகைப்படங்கள்..

படம்
 புகைப் படங்கள் என்றும் நம்முடைய பழைய நாட்களை நினைவு படுத்தும். அறுபது வருடங்களுக்கு முன்பெல்லாம் வீட்டில் புகைப்படம் பெட்டி கிடையாது. ஸ்டூடியோக்களுக்கு சென்றுதான் புகைப்படம் எடுக்க வேண்டும். அப்படி எடுத்த புகைப்படங்கள் எல்லார் வீட்டு கூடத்தில் வரிசையாக மாட்டப் பட்டிருக்கும்! பெற்றோர், குழந்தைகள் (குப்புறப்படுத்த, தவழ்ந்த, உட்கார்ந்த, நின்ற!) படங்களோடு பெற்றோர்களின் கூடப் பிறந்த சகோதர, சகோதரிகளின் புகைப்படங்களும் வரிசையாக மாட்டப் பட்டிருக்கும்! என் அம்மாவுக்கு புகைப்பட ஆசை அதிகம்! ஒவ்வொரு வருடமும் ஸ்டுடியோ சென்று குடும்ப புகைப்படம் எடுத்து அதைக் கண்ணாடி போட்டு மாட்டுவார்! எனக்கு குழந்தைகள் பிறந்தபின் அவர்களின் புகைப் படங்களும் மாட்டியிருநதார்! ..ஏன்மா இப்படி மாட்டி வைக்கிறாய்?..என்றால், 'உங்களைப் பார்க்கத் தோணும்போதெல்லாம் இவற்றைப் பார்த்து மகிழ்வேன்' என்பார்! இப்போதோ கைபேசியில் அத்தனை புகைப்படங்களும் உள்ளது! உள்ளங்கையில் உலகம் மட்டுமா..நண்பர்கள், உற்றார், உறவினர்களும்  இருக்கிறார்கள்! இப்பவும் புகைப்படம் எடுக்கும் போதெல்லாம் அம்மா நினைவு வந்து கண்கள் கலங்கும்.

செவிலியர்க்கு நன்றி🙏🏻

படம்
ராகவன், அனிதாவின் ஒரே மகள் அனன்யா. சிறு வயது முதலே மிகவும் புத்திசாலி. பள்ளியில் படிக்கும்போது எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறுவாள். அவளை மருத்துவராக்கும் ஆசை அவள் பெற்றோருக்கு. அவள் அம்மாவுக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை நடந்தபோது அவள் வயது பத்து. மருத்துவமனை செல்லும் போதெல்லாம் அவளுக்கு மருத்துவர்களை விட செவிலியர்கள் சேவையே மிக பிடித்தது. அவர்களின் தன்னலமற்ற, அருவருப்பில் லாமல் செய்த செயல்கள் அவள் மனதில் தானும் ஒரு  செவிலியராகும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.  பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளி முதலிடம் பெற்றபோது அவளை மருத்துவப் படிப்பு படிக்க வற்புறுத்தியபோது அவள் செவிலியர் படிப்பில் இணைந்து படித்தாள். மருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட துறையிலேயே திறமை பெறமுடியும். செவிலியர்கள் அனைத்து துறைகளைப் பற்றியும் அறிய முடியும்.   அவள் திறமை பளிச்சிட மிகப் பெரிய மருத்துவமனையில் செவிலியராகப் பணி புரிந்து சிறந்த செவிலியர் என்ற பெருமை பெற்றாள்.

சுற்றுலா செல்வோம் (புதிது)

படம்
சுற்றுலா செல்லும்போது கிடைக்கும் அனுபவங்கள் நமக்கு பல படிப்பினைகளைத் தரும்.  மனமகிழ்ச்சிக்காவும், இன்பப் பொழுது போக்கிற்காகவும்,  மற்றொரு இடத்திற்குச் சென்று அங்குள்ள சிறப்புகளைக் கண்டு மகிழ்வதும், பலருடன் இணைந்து பேசிப் பழகுவதும் சுற்றுலாவின் சிறப்பு.  சுற்றுலா எனும் சொல் உருவானது எப்படி? டூர்(tour) ‘ என்ற சொல்‘TORNUS எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது. டோர்னஸ் என்றால் சக்கரம். இச்சொல் சுற்றி வருவதைக் குறிப்பதால் சுற்றுலா ஆகியது! முன்பு போலின்றி இந்நாளில் சுற்றுலா செல்வது மிக எளிதாகும் பொருட்டு அரசாங்கம் பல வசதிகளை செய்து தருகிறது.  எனக்கு சுற்றுலா செல்வதிலும் பல இடங்களைக் கண்டு ரசித்து அவற்றை எழுத்தில் வடிப்பதும் மிகவும் பிடித்த விஷயம்!  கொரோனாவிற்கு முன்பு லண்டனில் என் பிள்ளை வீடு சென்று ஸ்காட்லாண்ட் செல்வதாக இருந்து போக முடியவில்லை!  இப்பொழுது நிலைமை ஓரளவு சரியானதால் 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' எனப் பெருமை பெற்ற கூர்கைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

6.பிள்ளை வரம் வேண்டி..(புதிது)

படம்
  விக்ரமிற்கும் ராணிக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும்  குழந்தை இல்லை. விக்ரமின் அம்மா சரசுவிற்கு இது பெரிய குறையாக இருந்தது. எப்போதும் ராணியையே குறை கூறிக் கொண்டிருந்தாள்.  இனியும் தாமதிக்க வேண்டாம் என்று சொல்லி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தபோது குறை இருப்பது விக்ரமிடம் என்று தெரிந்தது. பல மருந்துகளைப் பரிந்துரைத்தார் மருத்துவர். விக்ரமிற்கு அதில் இஷ்டமில்லை. 'நாம் ஒரு குழந்தையைத் தத்து எடுத்தாலென்ன?' என்று ராணியிடம் கேட்க, கணவனுக்கு பிடிக்காத மருத்துவ சிகிச்சையை முறற்சிப்பதை விட இது சரியானதாகத் தோன்றியது. சரசுவிற்கு  இதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஆனால் விக்ரம் தன் முடிவிலிருந்து மாறுவதாக இல்லை.  இருவரும் ஒரு அனாதை ஆசிரமம் சென்று ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்து வந்து அவளை சீரோடும் சிறப்போடும் வளர்த்தனர்.  ஒரு வயதில் அவள் பாட்டி என்று பாசத்துடன் சரசுவை  அழைத்தபோது அவளை அள்ளி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள் சரசு!

மனமே நீ யார்?

படம்
மனம் கடலைப் போலே ஆழமானது.. மனம் விளக்கைப் போலே ஒளிதருவது.. மனம் குரங்கைப் போலே அங்குமிங்கும் தாவுவது.. மனதில் நல்லெண்ணங்கள் இருந்தால் கோவில்.. மனமே நம்மை ஆட்டிப் படைக்கிறது.. மனமே நம் வாழ்க்கைக்கு ஆதாரம்.. மனதின் ஆற்றல் வலியது.மனம் போன வழி செல்லாமல் அறிவின் வழி நடந்தால் அல்லலின்றி இனிய வாழ்வு வாழலாம்! மனதை அடக்கி ஆள்பவனே மாமனிதன்.