...அப்பா அப்படியே இரு. ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறேன்... என்றால்,... கொஞ்சம் இருடி! தலை வாரி, பவுடர் போட்டு, விபூதி இட்டு வருகிறேன்...என்று சோம்பல்படாமல் அலங்காரம் செய்து கொண்டு போஸ் கொடுப்பதை என்னால் மறக்க முடியவில்லையே அப்பா. உன்னைப் பார்க்க ஆசை வரும்போதெல்லாம் அந்த புகைப்படங்களைத்தான் பார்க்கிறேன்.
நாம் எங்கு சென்றாலும்,எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் 'அப்பாடா' என்று நம் வீட்டில் வந்து படுக்கும் சுகம் இருக்கிறதே, அதற்கு இணையே கிடையாது! எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும், வசதிக் குறைவுகள் இருந்தாலும் அது நம் சொந்த வீடு என்கிறபோது அவை காணாமல் போய் ஒரு நிம்மதி தோன்றுவதை எவரும் உணரலாம். சொர்க்கமே என்றாலும் நம்மூர் மட்டுமல்ல நம் வீட்டைப் போலவும் வராது! வங்கி அதிகாரியாக இருந்த என் கணவருடன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல்; பல ஊர்களில், மாநிலங்களில் வாசம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி வீடு! நமக்கு வேண்டியபடி எந்த இடமும் இருக்காது. ஒரு வீட்டை சரி செய்வதற்குள் அடுத்த மாறுதல் வந்துவிடும். பணிக்குச் செல்லாத இல்லத்தரசியாக குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் படிப்பு, வீட்டு வேலைகள் என்று காலம் இறக்கை கட்டிப் பறந்த நாட்கள் அவை! ஆனாலும் சொந்த வீடு ஆசை மட்டும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டிருந்தது. எனக்கு சின்ன வயதில் இருந்தே ஊஞ்சலில் ஆடப் பிடிக்கும். கும்பகோணத்தில் என் தாத்தாவின் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் ஊஞ்சலில் ஆட எங்களுக்குள் (என்னுடைய மாமா, பெரிமா, சித்தி குழந்தைகளுடன் ) சண்டை
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே!(1) இன்று நம் சிங்காரச் சென்னைக்கு 382வது பிறந்தநாள்! Madras Day என்று ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி கொண்டாடப் படுகிறது.சென்னையின் மெரினா கடற்கரையும் மகாபலிபுரமும் உலகப் புகழ் பெற்ற இடங்களாயிற்றே! சென்னை..என் வாழ்வின் ஆரம்ப நாட்கள் சென்னையில்தான் ஆரம்பித்தது. அதை மறப்பதெப்படி? அன்றைய மதராஸ்க்கும்... இன்றைய சென்னைக்கும்.. அடேயப்பா..எத்தனை மாற்றங்கள்! 1961 முதல் '71வரை சென்னை வாசம். நாங்கள் குடியிருந்தது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கத்துக்கு நடுவில் இருந்த சூளை மேட்டில், பஜனை கோவில் தெருவில். நான் ஐந்தாம் வகுப்பு வரை கார்ப்பரேஷன் பள்ளியிலும், பின் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். அந்த நாட்கள் கவலையின்றி இருந்த கனாக்காலம்! பள்ளி வீட்டிற்கு அருகில்..மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு செல்வேன். நான்தான் பள்ளித் தலைவி. நான் நன்றாகப் பாடுவேன் என்பதால் தினமும் கடவுள் வாழ்த்து பாடுவதோடு பள்ளியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் நான்தான் பாடுவேன். பள்ளியின் ஆஸ்தான பாடகி! கே.பாலாஜியின் முதல் வெற்றிப் படமான ‘தங்கை’ படத்தில் சிவாஜிகணேசனி
கருத்துகள்
கருத்துரையிடுக