இனிய இல்லம்


எத்தனையோ இடங்களைச் சுற்றி வந்தாலும் நமக்கென ஒரு சொந்தவீடு வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. சென்னையிலும் குடந்தையிலும் வீடு வாங்கியும் விற்கும் நிலை.வங்கி அதிகாரியான என் கணவரின் மாற்றலால் பல ஊர்வாசம். கிடைத்த வீட்டில் வாழும் நிலைமை. பலஊர் பலநாடுகளைச் சுற்றி அலுத்த மனம் எளிமைக்கு ஏங்கியது. 

இனிய இல்லத்திற்கான கனவோ மிகப்பெரிது! சிறிய கிராமத்தில் தூண்கள் அணிவகுத்து நிற்கும் திண்ணையுடன் பெரிய கூடம், அலமாரிகளுடன் அறைகள், வசதியான சமையலறை, நிலவொளி வீசும் மாடி, ஓய்வு நேரத்தில் வீசியாட ஊஞ்சல், இறைவனை வழிபட  தனி சுவாமிஅறை அத்தனையும் வேண்டும். 

வீட்டை சுற்றிலும் தோட்டம், விதவிதமாய் பூச்செடிகள், நீண்டு உயர்ந்த தென்னை மரம், இதமான தென்றல் காற்று, காலெட்டும் தூரத்தில் காவேரி என்று நான் விரும்பிய அத்தனை ஆசைகளும் நிறைவேறிய ஒரு அழகிய வீடு கட்ட எங்கள் குலதெய்வம் சுவாமிநாத ஸ்வாமி தன் ஆலயம் அருகிலேயே கிடைக்க அருளியதை  எண்ணி மெய்சிலிர்க்கிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)