பசி..(100 வார்த்தை கதை)



அமுதாவால் தாங்க முடியவில்லை. இரண்டு வயதுக் குழந்தை ரோஜா பசிபசி என்று அழும்போது செய்வதறியாமல் கண் கலங்கினாள். கட்டிய கணவன் நல்லவனாக இருந்திருந்தால் இன்று இந்நிலை வருமா? சரவணன் ஒரு சோம்பேறி. வேலை செய்வதையே வெறுப்பவன். மனைவி, குழந்தை பற்றி சிறிதும் கவலைப் படாதவன். 


அவன் திருடன் என்பதால் அமுதா எங்காவது வேலை தேடிச் சென்றால்...நீயும் உன் கணவன் மாதிரி திருடமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?...என்பார்கள். 


ஒரு பணக்காரர் வீட்டில் திருடிய சரவணன் போலீசில் மாட்டிக்கொண்டு சிறைக்குப் போனபின் அவள்பாடு திண்டாட்டமாகியது. வழியின்றி ஒரு கோவில் வாசலில் பிச்சை எடுக்க அமர்ந்தாள். அச்சமயம் அங்கு வந்த ஒரு பெண் ரோஜாவின் அழகில் மயங்கினாள். 


அமுதாவைத் தன்னுடன் வந்து வீட்டுவேலை செய்யும்படியும், குழந்தையைத் தான் நன்கு வளர்ப்பதாகவும் கூறி அழைத்துச் சென்றாள். எப்படியோ ரோஜாவைப் பசியின்றி வளர்க்கவும் தனக்கு பாதுகாப்பாக ஒருஇடம் கிடைக்கவும் வழிகிடைத்ததை எண்ணி அந்தப் பெண்ணுடன் சென்றாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)