உங்க ஊர் ஸ்பெஷல்
எங்கள் கருத்து..உங்கள் எழுத்து.. அசோகா ஹல்வா ஹல்வா ஒரு ருசியான நாவூற வைக்கும் இனிப்பு. சாப்பிட சாப்பிட இன்னும் வேண்டும் என எண்ண வைக்கும் அற்புத சுவை கொண்ட இனிப்பு! தஞ்சை மாவட்டத்தின் ஸ்பெஷல் அசோகா ஹல்வா! இது தஞ்சையிலுள்ள திருவையாறில் செய்யப்படும் பிரபலமான இனிப்பு. இதற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது தெரியுமா? அதுவும் ஒரு ஒரு ருசியான கதை. ஹல்வா என்றாலே கோதுமையில் செய்வது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அசோகா ஹல்வா பயத்தம் பருப்பில் செய்யப் படுகிறது. இரண்டாம் உலகப் போரின் சமயம் நம் நாட்டில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் சுவையான ஹல்வா செய்ய முடியவில்லை. ஆனால் மக்களுக்கோ ஹல்வா மோகம் குறையவில்லை! ஹல்வாவை எப்படியாவது செய்து ருசிக்க வேண்டும் என்ற ஆவலில் ராமு ஐயர் என்பவர் கோதுமைக்கு பதிலாக பயத்தம் பருப்பை சேர்த்து அல்வா செய்தார். அதன் ருசியில் மயங்கிய மக்கள் அதற்கு பெரும் ஆதரவு தர ஹல்வா வியாபாரம் தொடங்கப்பட்டு அமோகமாக விற்பனை ஆயிற்று. திருநெல்வேலியின் இருட்டுக்கடை ஹல்வா போல் திருவையாறு ஆண்டவர் கடை ஹல்வா மிக பிரசித்தம்! அசோகா ஹல்வா தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் மிக பிரபலமான, ருசியான...
கருத்துகள்
கருத்துரையிடுக