விடுகதை விளையாட்டு
மழையில் நனைவான்..
காய்ச்சல் வராது.
வெயிலில் காய்வான்
வியர்வை வராது.
அவன் யார்?
...குடை, செருப்பு
பெயரோ மூன்றெழுத்து!
நிறமோ வெள்ளை!
அவள் இல்லாத வீடு இல்லை!
யாரந்த அழகி?
...பஞ்சு, பல்பு
அடி வாங்கி அடி வாங்கி
ஊருக்கு சேதி சொல்வான்!
ஆனால் அழ மாட்டான்!
அவன் யார்?
...தண்டோரா
கன்னங்கரேல் என்றிருப்பேன்..
காரிருள் அல்ல!
கானம் பாடித் திரிவேன்..
வானம்பாடி அல்ல!
நான் யார்?
...குயில்
கருத்துகள்
கருத்துரையிடுக