எல்லோரும் கொண்டாடுவோம்!
மரத்தில் இலைகள்
உதிர்வது போல்
ஒரு வருடம் முடிந்ததும்
நாட்காட்டியின் இதழ்கள்
உதிர்ந்து வெற்று அட்டை
மட்டுமே சுவரில்!
கடந்து போன நாட்களை
எண்ணிப் பார்க்கிறேன்!
ஆனந்தத்தில் சில!
சோகத்தில் சில!
கவிதையாய் சில!
கதறலாய் சில!
கொரோனாவின் வரவு
கொண்டாட்டங்களுக்கு தடா!
பிறக்கப் போகும் புத்தாண்டு அனைவருக்கும் மனமகிழ்ச்சி,
ஆரோக்கியம், வெற்றி, உயர்வு இவற்றைத் தர இறைவனை
வேண்டிக் கொண்டாடுவோம்!
கருத்துகள்
கருத்துரையிடுக