வாசலுக்கு அழகு
வாசல் அழகு!
தினமும் வாசலில் நீர் தெளித்து சுத்தம் செய்து கோலமிட்டால் மகாலட்சுமி மகிழ்ந்து உள்ளே வந்து சகல ஐசுவரியங்களும் தருவாள் என்பது நம்பிக்கை.மார்கழி மாதம் வானுலக தேவர்களின் விடிகாலை நேரம் என்பதால் அவர்கள் பூவுலகம் வருவதால் அவர்களை வரவேற்க வீட்டு வாசலில் கோலம் போட்டு அவர்களை வரவேற்க வேண்டும். இன்று நாம் வாழும் ஃபிளாட்டுகளில் வாசலும் இல்லை..கோலமும் இல்லை..அதை ரசிப்பவரும் இல்லை. ஸ்டிக்கர்களே காட்சி தருகின்றன. இந்த மார்கழியிலாவது வாசலில் நாமே சிறிய கோலமாவது போட்டு கோலக் கலை அழியாமல் காப்போம்🙏🏼
கருத்துகள்
கருத்துரையிடுக