அம்மா நீயே எல்லாம்..
தொப்புள் கொடியோடு நம் உறவுக் கொடியையும் உருவாக்கிய என் தாயே!
உன் கருவறையில் நான் கனமாய் இருந்தும் சுமையாய் எண்ணாமல்
சுகமாய் அனுபவித்தவளே!
நான் வெளியுலகை தரிசித்தபோது
நீ ஆனந்தத்தின் உச்சம் அடைந்தாய்!!என் அழுகை சத்தம் உன் காதுகளில்
கேட்குமுன்னே அயராது எழுந்தோடி வந்து அணைத்து என்னை உச்சி முகர்ந்து பாலூட்டிய உனதன்பை இனி எப்போது உணர்வேன்?
சின்ன நோய் வந்தாலும் சிலநொடி கூட கண் மூடாது என்னைக் கைகளில் ஏந்தித் தாலாட்டி சீராட்டி பாராட்டிய உனக்கு நிகர் வேறுண்டோ?
உன் நகலாய் என்னை மாற்றி என் நிழலாய் என்னுள் இருப்பவள்!
என் நல்ல தோழி நீ; உயர்ந்த உறவு நீ!
ஊக்கம் ஊட்டி யாவும் கற்பித்த ஆசிரியை நீ!
அன்பு அக்கறை அரவணைப்பு பாசம்
நேசம் தியாகம் அனைத்தும் கொண்ட
தெய்வமே!
நீ எங்கிருந்தாலும் எனைக் கண் போல் பாதுகாப்பாய் என்ற நம்பிக்கையே
என்றும் என் பலம்!🙏
கருத்துகள்
கருத்துரையிடுக