பள்ளியின் சோகம்
பிள்ளைகளைப் பார்த்து பத்திரண்டு மாதங்களாகிறது..
அவர்களின் கூச்சலும் மகிழ்ச்சியும் எனக்கு மறந்தே போயிற்று..
அழகழகாய் சீருடை அணிந்து அணிவகுத்து செய்யும் பிரார்த்தனையை மனம் நாடுகிறது..
காலாண்டு அரையாண்டு
முழு ஆண்டு பரீட்சைகளின் விடுமுறைகளில் மட்டுமே பிரிந்திருந்தோம்..
அரையாண்டு தேர்வில் அத்தனை மாணவரும் வருவார்கள் என்று ஆவலுடன் காத்திருந்த என் மனத்தின் வலியைக் கொரோனாவும் பெருமழையும் அறியுமா?
கருத்துகள்
கருத்துரையிடுக