தாய்மை
அன்புக் கணவனே!
நீ எத்தனையோ பரிசுகள் கொடுத்தும் கிடைக்காத மகிழ்ச்சியை இந்தத் தாய்மை என்ற பரிசில் பெற்றேன்!
நம் இரு உயிரும் இணைந்த இந்தப் பரிசுக்கு ஈடேது!
******
மூன்று எழுத்தில் ஒரு கவிதை எழுதச் சொன்னால் நான் எழுதுவேன் தாய்மை என்று!அதனை வர்ணிக்க வார்த்தை ஏது?தாய்மைக்கு இலக்கணம் ஏட்டில் ஏது? பாட்டில் ஏது?அவள் அன்பில் இயல்பாய் தானே வந்தது அன்றோ!
*******
'அம்மா' என்ற என் மகளி(னி)ன் குரல் தொலைபேசியில் கேட்டவுடன் என் மனமும் உடலும் சிலிர்த்துப் போகும் தருணம் நான் உணர்கிறேன் தாய்மையின் பெருமையை!
கருத்துகள்
கருத்துரையிடுக