அன்புக் கவிஞரே! தங்கள் உருவம் எளிது! பாடும் குரலோ இனிது! என்றும் எமது கண்களில் தெரியும் உங்கள் புன்னகையும் காதுகளிலும் ஒலிக்கும் தேன் அமுதக் குரலும் தங்கள் இனிய குணங்களால் எம் உள்ளத்தில் வாழ்கிறீர்! வாழ்க நீ பல்லாண்டு! உலகம் உள்ளவரை உன் பாடல்கள் வாழும்!
நிதியுதவி..(தந்தைமனம்) குமாரின் அப்பா ஒருபெரிய கம்பெனியில் உயர்பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர். அவரைப்பாராட்டிய கம்பெனி அவரதுமகனுக்கு வேலைதருவதாக சொல்லியும் தன்மகன் அவன்முயற்சிலேயே வேலைதேடிக் கொள்ளவேண்டும் என்றுகூறி மறுத்துவிட்டார். குமார் பலஇடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. தினமும் காலைசாப்பிட்டு செல்பவன் இரவுதான் வீடுவருவான். ..உன் பிள்ளை ஊரை சுற்றுவதைவிட்டு கொரோனாவை வாங்கிவரப் போகிறான்பார்..என்பார் மனைவியிடம். அன்று மாலை இரண்டு இளைஞர்கள் கையில் ஏதோ நோட்டுடன்வர, அவர்கள் ஒரு நோட்டீஸ் கொடுத்து கொரோனாவில் கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கு தாம் உதவுவதாகவும் முடிந்த தொகையைத் தரும்படியும் கேட்க, அதில் தலைவர்என்ற இடத்தில் குமாரின் பெயரைக்கண்டு ஒருகணம் திகைத்து அவர்களிடம் விபரம் கேட்டார். அவர்கள்...இவர்தான் எங்களின் இந்தசேவைக்கு காரணம். இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்திருக்கிறோம். உங்களால் முடிந்தது கொடுங்கள்..என்றனர். பிள்ளையின் நல்லெண்ணத்தை அறிந்து அவனைத்தவறாக எண்ணியதற்கு மன்னிப்பாக ஒருலட்சம்ரூபாய் கொடுத்தார்.இரவு மகனைப் பாராட்...
அப்பா உங்களுக்காக... அப்பா..அவர் ஒரு சரித்திரம் அப்பா என்றதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது! இந்த வார்த்தையை சொல்லும் போதே மனம் சிலிர்க்கிறது..கண்கள் குளமாகிறது..! முதல் குழந்தை பெண்தான் வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டு பிறந்தவளாம் நான் என்று என் அம்மா சொல்வார். எனக்கு கீழே மூன்று தம்பிகள் இருந்தாலும் என் மீது ஒரு தனி பாசம் என் அப்பாவுக்கு என்பதை நான் பலமுறை உணர்ந்ததுண்டு. என் இரண்டு வயதிலிருந்தே மாலையில் அலுவலகத்திலிருந்து அப்பா எப்பொழுது வருவார் என்று வாசலிலேயே காத்திருப்பேனாம். அப்பாவும் பிஸ்கட் சாக்லேட் என்று ஏதாவது வாங்கி வருவாராம். அப்பா வந்ததும் அன்று நடந்ததெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டே அவரை உடை மாற்ற விடுவேனாம்! நான்கு வயது வரை வெளியில் சென்றால் அப்பாவை என்னைத் தூக்கி வரச் சொல்லி அடம் செய்வேனாம்! நான் படிக்கும் நாட்களில் எனக்கு கணக்கில் சந்தேகம் வந்தால்(எனக்கு கணக்கு வராத பாடம்!) பொறுமையாக சொல்லித் தருவார். எனக்கு கல்லூரி சென்று படிக்க ஆசை இருந்தும் அப்பாவிற்கு இஷ்டமில்லாததால் அனுப்...
கருத்துகள்
கருத்துரையிடுக