பாதுகாப்பு
அதிகக் கூட்டம் ஆபத்து!
இல்லத்தில் இருந்தால் ஈவிரக்கம் இல்லா கொரோனாவிலிருந்து பாதுகாப்பு!
உண்டு உறங்கி வீட்டில் இருந்தால் ஊருக்கும் உறவுக்கும் பாதுகாப்பு!
எங்கும் செல்ல முடியாத
ஏக்கம் வேண்டாம்!
ஐயமில்லை அதுவே நம் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு!
வெளியில் செல்லாமல்
ஓரிடத்தில் இருந்தால்
ஔடதம்இல்லாத கொரோனாவிலிருந்து கிடைக்குமே பாதுகாப்பு!
அஃதே நமக்கு அவசியம் இன்று!!
கருத்துகள்
கருத்துரையிடுக