...அப்பா அப்படியே இரு. ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறேன்... என்றால்,... கொஞ்சம் இருடி! தலை வாரி, பவுடர் போட்டு, விபூதி இட்டு வருகிறேன்...என்று சோம்பல்படாமல் அலங்காரம் செய்து கொண்டு போஸ் கொடுப்பதை என்னால் மறக்க முடியவில்லையே அப்பா. உன்னைப் பார்க்க ஆசை வரும்போதெல்லாம் அந்த புகைப்படங்களைத்தான் பார்க்கிறேன்.
நாம் எங்கு சென்றாலும்,எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் 'அப்பாடா' என்று நம் வீட்டில் வந்து படுக்கும் சுகம் இருக்கிறதே, அதற்கு இணையே கிடையாது! எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும், வசதிக் குறைவுகள் இருந்தாலும் அது நம் சொந்த வீடு என்கிறபோது அவை காணாமல் போய் ஒரு நிம்மதி தோன்றுவதை எவரும் உணரலாம். சொர்க்கமே என்றாலும் நம்மூர் மட்டுமல்ல நம் வீட்டைப் போலவும் வராது! வங்கி அதிகாரியாக இருந்த என் கணவருடன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல்; பல ஊர்களில், மாநிலங்களில் வாசம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி வீடு! நமக்கு வேண்டியபடி எந்த இடமும் இருக்காது. ஒரு வீட்டை சரி செய்வதற்குள் அடுத்த மாறுதல் வந்துவிடும். பணிக்குச் செல்லாத இல்லத்தரசியாக குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் படிப்பு, வீட்டு வேலைகள் என்று காலம் இறக்கை கட்டிப் பறந்த நாட்கள் அவை! ஆனாலும் சொந்த வீடு ஆசை மட்டும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டிருந்தது. எனக்கு சின்ன வயதில் இருந்தே ஊஞ்சலில் ஆடப் பிடிக்கும். கும்பகோணத்தில் என் தாத்தாவின் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் ஊஞ்சலில் ஆட எங்களுக்குள் (என்னுடைய மாமா, பெரிமா, சித்தி குழந்தைகளுடன் ) சண்டை
"ஏங்க குழந்தைகளோட எங்கேயாவது போய்ட்டு வரலாமா" மாலதி கேட்டாள். "குழந்தைகளையே கேட்கலாம்" என்றான் IT கம்பெனியில் வேலை செய்யும் மாதவன். "ரமண், சுமன் இங்க வாங்க. நாம ஜாலியா வெளிய எங்க போலாம்?" "ஹைய்யா..பீச்சுக்கு போலாம்பா" குழந்தைகள் சற்று நேரம் தண்ணீரில் விளையாடிவிட்டு மணலில் வீடு கட்டி அதில் அறைகளைத் தடுத்து உள்ளே நாற்காலி டி.வி. எல்லாம் செய்தார்கள். மாலதியும் மாதவனும் தாங்கள் வாங்கப் போகும் வீடு பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். "யார் வீடு அழகா இருக்குனு அப்பா அம்மாவைக் கேக்கலாமா?"என்று பெற்றோரை அழைத்தனர். மாதவன் ஐந்து வயது சுமனிடம் "ரமண் வீட்டில் இரண்டு பெட்ரூம் இருக்கு. உன் வீட்டில் ஒரு ரூம்தானே இருக்கு" "நான் பெரியவனானதும் நீங்களும், அம்மாவும் நம்ம தாத்தா,பாட்டி இருக்கற ஹோமுக்கு போயிடுவீங்களே. அதனாலதான்"என்றதைக் கேட்டதும் இருவரும் சம்மட்டியால் அடிபட்டதுபோல் உணர்ந்தார்கள். உண்மையைச் சொல்லும் துணிச்சல் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக