பயம் (2.3.'21)
எதையும் எதிர் கொண்டால் பயத்திற்கு இடமேது?
இன்று வாய் திறந்து பேச பயந்து வாய்மூடி நடக்கிறோம்!அன்போடு அணைக்க அஞ்சி கரம் கூப்பி நகர்கிறோம்!
கரம் கோத்து நடக்க இயலாமல்காததூரம் செல்கிறோம்!
கடவுளும் இன்று கண்ணுக்கெட்டா தூரத்தில்!
கைகட்டி வாய்பொத்தி கட்டளைகளை கடைப் பிடித்து விலகி நின்றால் பயமின்றி இருக்கலாம்!
கருணைகூர் கொரோனாவே தயை செய்து எங்களை விட்டு காணாமல் போய்விடு!
கருத்துகள்
கருத்துரையிடுக